ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜையின் இறுதிநாளான சகஸ்ர கலச பூஜை நடந்தது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது

Published On 2018-10-23 05:09 GMT   |   Update On 2018-10-23 05:09 GMT
சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 17-ந்தேதி ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று நடை அடைக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று வரை நடந்தது. தினமும் நெய் அபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜையின் இறுதிநாளான நேற்று காலையில் சகஸ்ர கலச பூஜை நடந்தது. இந்த பூஜைகளை தந்திரி ராஜீவரு கண்டரரு நடத்தினார். மாத பூஜை முடிவடைந்து நேற்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

அடுத்த மாதம் (நவம்பர்) மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும் போது புதிதாக தேர்வான மேல்சாந்திகள் பணிபுரிவார்கள்.

இதற்கிடையே சபரிமலை நிலை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு ஏதாவது கருத்து கேட்கும் பட்சத்தில் அறிக்கை தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தேவசம்போர்டு கூறியுள்ளது. 
Tags:    

Similar News