ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களபபூஜை 31-ந்தேதி தொடங்குகிறது

Published On 2017-07-28 05:50 GMT   |   Update On 2017-07-28 05:50 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை வருகிற 31-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி வரை நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த பூஜை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகத்துடன் பூஜை நடக்கிறது.

முதல் நாளான 31-ந் தேதி திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்படும் தங்க குடத்தில் சந்தனம், களபம், பச்சை கற்பூரம், ஜவ்வாது, பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் கலந்து அந்த தங்க குடத்தை மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. பின்னர் அம்மனுக்கு தங்க ஆபரணங்கள், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, தாமரை,துளசி, மல்லிகை உள்பட பல வகையான பூக்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் பாரதி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News