ஆன்மிகம்

முப்பெரும் தேவியராக காட்சி தரும் அம்மன்

Published On 2017-07-11 10:06 GMT   |   Update On 2017-07-11 10:06 GMT
சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் அம்மன் காலையில் சரஸ்வதியாகவும், மதியம் துர்க்கையாகவும், மாலையில் லட்சுமியாகவும் காட்சி தருகிறார்.
கேரள மாநிலம், சோட்டாணிக்கரையில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தேவி கிழக்கு நோக்கி சிவப்பு வெட்டுக்கல்லாய் காட்சி தருகிறார். அருகில் கருங்கல்லாக விஷ்ணு உள்ளார்.

இந்த தலத்தில் பகவதி அம்மன் காலையில் வெண்மையான உடையில் சரஸ்வதியாகவும், மதியம் சிவப்பு பட்டு உடுத்தி துர்க்கையாகவும், மாலையில் நீலநிற ஆடையில் லட்சுமியாகவும் காட்சி தருகிறார். தினமும் முப்பெரும் தேவியராக காட்சி தரும் பகவதி அம்மனை ஏராளமானோர் வழிபட்டு செல்கிறார்கள்.
Tags:    

Similar News