என் மலர்
நீங்கள் தேடியது "ஆடி மாதம்"
- வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு அன்ன தானம் வழங்கப்படுகிறது.
- பெருமாள் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சீர் கொண்டு வரப்படுவது சிறப்பு.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது போல் பெரிய மாரியம்மன் கோவிலுக்கும் பல சிறப்புகள் உள்ளன. இந்த கோவில் 300 வருடம் பழமையானது.
கோவிலின் மூலவராக பெரிய மாரியம்மன் உள்ளார். கோவிலில் அரசமர விநாயகர், முருகர், துர்க்கை அம்மன், நவக்கிரகம் போன்ற சாமி சிலைகள் உள்ளன. கோவிலில் பெரிய பாம்பு புற்று ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் ஆடி மாதம் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு அன்ன தானம் வழங்கப்படுகிறது.
ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சீர் கொண்டு வரப்படுவது சிறப்பு. ஆடி 18 அன்று கன்னிமாருக்கு காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவிலின் முக்கிய வழிபாடாக புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியம் வேண்டி அம்மனுக்கு எண்ணை வைத்து வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பல வருடங்களாக இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் ஆடி மாதம் கோவிலில் பாம்பு புற்றில் நாக பஞ்சமி விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் முழுவதும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆடி மாதம் பெண்கள் அதிக அளவில் வந்து அம்மனை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்ற பரிகாரங்கள் செய்வார்கள்.
- ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர்.
- திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள்.
ஆடி மாதத்தில் வரும் 18-ந் தேதியை ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது. இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கிறோம். பொதுவாக தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படியாக கொண்டு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இந்த ஆடிப்பெருக்கு விழா மட்டும் ஆடி மாதம் 18-வது நாள் என நாளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. தென்மேற்கு பருவத்தில் பெய்யும் மழையினால் அனைத்து ஆறுகளும் நிரம்பி வழியும். இதையே ஆற்றுப்பெருக்கு என்பர். இதனால் உழவர்கள் நம்பிக்கையுடன் விதை விதைப்பர். இந்த சமயத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தான், தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்காக நதிகளை தெய்வமாக கருதி போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து, பின் உழவு வேலையை தொடங்குகின்றனர். இதனால் தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் உருவானது.
இந்த விழா தமிழ் பண்பாட்டின் சிறப்புவாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு மக்களும் ஆற்றங்கரையில் கூடி நின்று ஆற்றுப்பெருக்கை கண்டு களிப்பர். அன்றைய தினம் மக்கள் ஆற்றில் குளித்துவிட்டு, ஆற்றங்கரையில் பூஜை செய்வதற்கு ஒரு இடத்தை பிடித்துக்கொள்கின்றனர். அந்த இடத்தை பசு சாணத்தால் மெழுகி சுத்தம் செய்து, அதன்மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

மேலும் வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம், பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காண்பித்து வழிபடுகின்றனர். தங்களுக்கு தடங்கல் இல்லாத விளைச்சல் வேண்டி நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் வீட்டில் பலவிதமான கலப்பு உணவுகளை தயார் செய்து வந்து, ஆற்றங்கரையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியோடு உணவை உண்பார்கள்.
ஆடிப்பெருக்கு அன்று புதிதாக திருமணமானவர்கள், தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கி விட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தன் கணவன் கையால் கட்டிக்கொள்வர். இதன்மூலம் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பதும், வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த ஆடி மாதத்திற்குள் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் என்கிறார்கள்.
திருச்சி திருவரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும். ஆடிப்பெருக்கு நாளன்று திருவரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு, அம்மா மண்டபம் படித்துறைக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைப் பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அறப் பளீசுவரரை தொழுவது வழக்கம். பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.
- ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படுகிறது.
- ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.
ஆடிப்பூரம் ஆடி மாதத்தில் வரக் கூடிய முக்கிய நிகழ்வாகும். இந்த நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்களை படைத்து வழிபடுவது வழக்கம்.
ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் ஜூலை 27-ந்தேதி மாலை 6.55 மணிக்கு தொடங்கி, ஜூலை 28-ந்தேதி இரவு 8 மணி வரை இருக்கிறது.
ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். வழிபாடு முடிந்ததும் அந்த கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக கொடுப்பது வழக்கம். அந்த வளையலை அணிந்தால், அம்பாள் தாய்மை கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில், பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வதும் உண்டு.
ஆடிப்பூரம் அன்று ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். .
ஆடிப்பூரம் அன்று வைணவத் திருக்கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஏனெனில் இந்த நாளில்தான் ஆண்டாள் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
- ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது.
- ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம்.
ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை, 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள். பூமியில் அவதரித்த அம்மன், ஆடி மாதத்தில் தான் பூப்படைந்ததாகவும், சூலுக்கு தயாரானதாகவும் கூறப்படுகிறது. அதை குறிப்பதாக ஆடிப்பூரம் திருவிழா நடைபெறும் 10 நாட்களும், அம்மன் தினமும் ஒரு கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக நம்பிக்கை.
ஆடிப்பூரம் அன்று தான் சித்தர்களும், யோகிகளும் தங்களுடைய தவத்தைத் தொடங்குகின்றனர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 'ஆடிப் பூரம் திருநாள்' மிகவும் சிறப்பானது. பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தப்படுவது வாடிக்கை.
இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். பின்னர் அம்மனை அலங்கரிக்கப் பயன்படுத்திய வளையல்கள், தரிசிக்க வந்த பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அவ்வாரு பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்கலங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக் கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால், எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை போன்ற மங்கலப் பொருட்களை வாங்கித் தர வேண்டும். அப்படி செய்தால் இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். தாலி பாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக, வேறு எந்த வேண்டுதல்களும் தேவையில்லை. ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள்.
ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில், பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வதும் உண்டு.
ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். ஆடிப்பூரம் அன்று சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் அம்மன் ஆலங்களுக்குச் சென்று வழிபட்டால், கேட்ட வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.
ஆடிப்பூரம் அன்று ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், கூழ் ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.
- ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன.
- அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி,
* தை மாதம் வரும் தை கிருத்திகை,
* கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை
* ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை
இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.
ஆடி மாதக்கிருத்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தட்சணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.
ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.
தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
ஆடிக்கிருத்திகை தினமான நாளை பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.
ஆடிக்கிருத்திகை அன்று பழனியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள்.
உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவுகூரும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.
குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது. அரக்கர்களின் செருக்கழித்து முருகன் ஓய்வெடுத்த திருத்தலம் திருத்தணி ஆகும்.
அந்த தினத்தில் இங்கு அரக்கர்கள் வீழ்ச்சிக்கும் மக்கள் மகிழ்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுத்த இறைவனை நினைத்து பல்வேறு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
- பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
- பக்தர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
தேனியில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில். சுயம்புவாக எழுந்தருளி மூலவர் நிலையில் உள்ள சனீஸ்வர பகவான் கோவில் என்பதால் தமிழக அளவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் 6 கண்களுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
தற்போது கோவில் நிர்வாகம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஆடி மாத வழிபாடு வழக்கமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவிலின் முன்பு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசலில் தரிசனம் செய்ய பாதை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுரபி நதியில் நீராடி பின்னர் சனீஸ்வர பகவானை மனமுருக வழிபட்டு எள்தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் இன்று ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். அவர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
ஆடி 18-ம் நாளன்று இங்குள்ள சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச்சிறப்பு பெற்றது.
- அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் என்பதால் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
சாத்தூர்:
உலகில் உள்ள உயிர்களை காப்பதற்காக அன்னை பராசக்தி பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதம் தான் ஆடி மாதம். அந்த ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஆடி வெள்ளி மட்டும் எப்போதும் தனிச்சிறப்பு பெற்றது. ஏன் என்றால் இந்த ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால், எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மாரியம்மன் கோவில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது. இந்த மாதத்தில் தென் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் மாதம் முழுவதும் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்துவர்.

இந்த நிலையில் இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் குழுவாக கோவிலில் அம்மன் பாடல்கள் பாடி கையில் வேப்பிலையுடன் ஆடிக் கொண்டு கோவிலிலை வலம் வந்தனர். மேலும் இந்த கோவிலுக்கு சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், கடையநல்லூர் உள்ளிட்ட தென்காசி திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி அம்மனை வணங்கினர்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் என்பதால் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தங்குமிடம், கழிவறை குளியலறை வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாக சார்பில் பரம்பரை அறங்காவலர் குமு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, மற்றும் கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
- ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும்.
- பெரும்பான்மையான பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று காவடி எடுத்தல், அலகு குத்துதல், அன்னதானம் செய்தல் முதலானவற்றை செய்வர்.
ஆடி மாதம் அம்மனுக்கு மட்டும் உகந்த மாதம் கிடையாது. தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உகந்த மாதம். கிருத்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது தான் எனினும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்த முக்கிய நாளாக இந்த நாளை தேர்வு செய்கிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி கிருத்திகை நாளன்று தான் தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் சூரனை அழிக்க சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தார். அதனால் தான் முருக பக்தர்கள் இந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர் . வாழ்வில் எல்லா வளமும் பெறுவதற்கு கந்தனின் கடை கண் பார்வை போதும் என்பார்கள். அந்த கந்தனின் அருளை முழுமையாக பெறுவதற்கு கிருத்திகை வழிபாடு செய்தாலே போதும். மாதாமாதம் வரும் கிருத்திகை வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஆண்டிற்கு மூன்று கிருத்திகையில் செய்தாலே போதும் என்பர். ஆடி கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை. தை கிருத்திகை இந்த மூன்று தெய்வீக தினங்களில் முறையாக விரதமிருந்து வழிபட்டாலே போதும் கந்தனின் பார்வை நம் மீது பட்டு எல்லா வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆடி கிருத்திகையில் பக்தர்கள் அனைவரும் உள்ளன்போடும், பக்தியோடும் தங்களது பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். அன்றைய தினம் புண்ணீய தீர்த்தத்தில் நீராடி, கந்தர் அலங்காரம்,திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் முதலானவற்றை பாராயணம் செய்வார்கள். பெரும்பான்மையான பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று காவடி எடுத்தல், அலகு குத்துதல், அன்னதானம் செய்தல் முதலானவற்றை செய்வர். மற்ற முருகன் கோவில்களை விட திருத்தணி முருகன் கோவில் தான் ஆடி கிருத்திகைக்கு விசேஷமானது.
ஆடி கிருத்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும். அன்றைய தினம் முருகனின் ஆறுபடை வீடுகளில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், ஹோமங்கள், தேர் பவனி ஆகியவை நடக்கும். இது தவிர நாடெங்கிலும் இருக்கும் முருகன் கோவிலில் விழாக்கோலம் கொண்டிருக்கும்.
இந்த ஆண்டு ஆடி கிருத்திகை கூடுதல் சிறப்பு. ஏனெனில், இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய 2 தேதிகளில் ஆடி கிருத்திகை வருகிறது. இரண்டு கிருத்திகை வருவதால் இதில் எந்த நாளில் ஆடி கிருத்திகை விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் பக்தர்களிடையே நிலவுகிறது.
இருப்பினும் ஜூலை 20 தேதி வரும் கிருத்திகை ஆடி கிருத்திகையாக கணக்கில் கொள்ளக்கூடாது என்றும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமையன்று வரும் கிருத்திகை தான் ஆடிக் கிருத்திகை என்று கூறுகின்றனர். அன்றைய தினம் காலை 08.27 மணி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 06.49 மணிக்கு ஆடிக் கிருத்திகை நிறைவடைகிறது.
திருத்தணி முருகன் கோவிலில் 5 நாள் உற்சவ விழாவாக ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி அஸ்வினி கிருத்திகையும், ஆகஸ்ட் 15ம் தேதி பரணி கிருத்திகையும், ஆகஸ்ட் 16ம் தேதி ஆடிக் கிருத்திகையும் கொண்டாடப்படவுள்ளது. மேலும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் நாள் தெப்ப உற்சவமும், ஆகஸ்ட் 17ம் தேதி இரண்டாம் நாள் தெப்ப உற்சவமும், ஆகஸ்ட் 18ம் தேதி மூன்றாம் நாள் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அம்மன் நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நம்மை நல்வழிப்படுத்தும் அற்புத மாதம் தான் இந்த ஆடி மாதம்.
- ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியும், செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்!
ஆடி மாதத்தை பண்டிகைகளின் தொடக்க மாதம்.. பக்தி மாதம் என்றே சொல்லலாம் ! பூமாதேவி அவதரித்த உன்னத மாதம். அதனால் தான் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும் பண்டிகைகளின் தொடக்க மாதமாகவும் கொண்டாடப்படுகிறது. அம்மன் நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி நம்மை நல்வழிப்படுத்தும் அற்புத மாதம் தான் இந்த ஆடி மாதம்.
இந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியும், செவ்வாயும் பெண்களுக்குப் பொன்னான திருவிழா தான்! இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதம் நாளை மறுநாள் 17-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 16-ந்தேதி வரை உள்ளது. அம்மனுக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விசேஷ நாட்கள் என்ன, விரத நாட்கள் என்ன, அவை எந்தெந்த தேதியில் வருகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆடி மாத விசேஷ நாட்கள் :
ஜூலை 24- ஆடி அமாவாசை
ஜூலை 28- ஆடிப்பூரம்,நாக சதுர்த்தி
ஜூலை 29- கருட பஞ்சமி ,நாக பஞ்சமி
ஆகஸ்ட் 03- ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 07- ஆடித்தபசு
ஆகஸ்ட் 08- வரலட்சுமி விரதம்
ஆகஸ்ட் 09- ஆவணி அவிட்டம்
ஆகஸ்ட் 10- காயத்ரி ஜபம்
ஆகஸ்ட் 12)- மகா சங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 16- கோகுலாஷ்டமி
ஆடி மாத விரத நாட்கள்:
ஜூலை 20 -கிருத்திகை
ஜூலை 21- ஏகாதசி
ஜூலை 22- பிரதோஷம்
ஜூலை 23- சிவராத்திரி
ஜூலை 24- அமாவாசை
ஜூலை 28- சதுர்த்தி
ஜூலை 30- சஷ்டி
ஆகஸ்ட் 05- ஏகாதசி
ஆகஸ்ட் 06- பிரதோஷம்
ஆகஸ்ட் 08- திருவோணம்,பெளர்ணமி
ஆகஸ்ட் 12- சங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 14- சஷ்டி
ஆகஸ்ட் 16- கிருத்திகை
ஆடி மாத அஷ்டமி, நவமி மற்றும் கரி நாட்கள்:
ஜூலை 17-அஷ்டமி
ஆகஸ்ட் 01-அஷ்டமி
ஆகஸ்ட் 16-அஷ்டமி
ஜூலை 18-நவமி
ஆகஸ்ட் 02-நவமி
ஜூலை 18-கரி நாட்கள்
ஜூலை 26-கரி நாட்கள்
ஆகஸ்ட் 05-கரி நாட்கள்
ஜூலை 27 ஆம் தேதி வாஸ்து நாள். அன்றைய தினத்திற்கான வாஸ்து நேரம் காலை 07.44 முதல் 05.20 வரை .
2025 ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை நட்சத்திரங்கள் அமைந்துள்ளது. இதனால் இந்த வருடம் நாம் 2 ஆடி கிருத்திகை கொண்டாட இருக்கிறோம்.
- ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம்.
- ‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான திருவிழாக்களும் நடைபெறும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, கிராம தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு என அனைத்து தெய்வ வழிபாட்டிற்கும் இந்த மாதம் ஏற்றதாகும்.
ஆடி மாதத்தில்தான் தட்சணாயனம் தொடங்குகிறது. தட்சணாயனம் என்பது சூரிய பகவான் வடதிசையில் இருந்து தென் திசை நோக்கி பயணம் செய்யும் காலமாகும். இது ஆடி மாதம் தொடங்கி மார்கழி வரை ஆறு மாதங்களை கொண்டதாகும். இந்தக் காலம் முழுவதும் தேவர்களுக்கு இரவு பொழுதாக கருதப்படுகிறது. இந்த புண்ணிய காலத்தில் நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை போன்ற சிறப்பு வாய்ந்த நாட்கள் வருகின்றன.
ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். அன்றைய தினம் திருவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் நந்தவனத்துக்கு எழுந்தருள்வார். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாடி வழிபட வேண்டும். இதனால் நாம் வேண்டிய அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும். அதுபோல ஆடி பவுர்ணமி தினத்தில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே அன்றைய தினம் வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டால் அன்னையின் மனம் குளிர்ந்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.
சிலர் ஆடி மாதத்தை 'பீடை மாதம்' என்று சொல்வார்கள். இது அவர்களது அறியாமையால் கூறுவதாகும். உண்மையில் 'பீட மாதம்' என்றுதான் அதற்குப் பெயர். அதாவது இறைவனை நமது மனமாகிய பீடத்தில் வைத்து வழிபட வேண்டிய மாதம் என்பதே இதன் உண்மையான பொருள்.
பொதுவாக வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த தினமாகும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். அம்மனை வழிபடும்போது லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபட வேண்டும். ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை அள்ளித் தரும்.
'ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது பழமொழி. அதாவது பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமணப் பாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வம் மற்றும் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிய வேண்டும். பின்பு சூரிய உதயத்துக்கு முன்பாக சாணத்தைப் பிள்ளையாராக பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அருகம்புல் கொண்டு பிள்ளையாரை பூஜிக்க வேண்டும். வாழை இலையில் நெல் பரப்பி, அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட்டால் செல்வம் செழிக்கும்.
ஆடி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, கருப்பு ஊமத்தம் பூமாலை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எத்தகைய பகைமையும் விலகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.
- பூஜைகளை முடித்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு மதிய உணவு பரிமாறலாம்.
- அம்பிகையின் சிலையோ அல்லது திருவுருவப்படத்தையோ வைத்து மலர் தூவி, தூபமேற்றி வழிபடலாம்.
ஆடி முதல் ஞாயிறு நெருங்கிவிட்டது. இப்போதே திருமணமான பெண்கள் கணவன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்றும் கன்னிப்பெண்கள் வருங்கால கணவர் நல்லவராகவும், மனதிற்கு பிடித்தவராகவும் எந்தவித தோஷங்களும் இருக்கக் கூடாது என்றும் விரதமிருந்து வேண்டிக்கொள்வதற்காக சுமங்கலி பூஜைக்கு ஆயத்தமாகி இருப்பர்.
பெரும்பாலான பெண்கள் சுமங்கலி பூஜை எப்படி செய்ய வேண்டும், அம்பிகையை விரதமிருந்து வழிபடும் முறை முதலானவற்றை தெரிந்து வைத்திருப்பர். ஆனால், சுமங்கலி பூஜையின் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன? எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்திருக்கமாட்டார்கள். அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்...
சுமங்கலி பூஜையின் போதும் சரி, பொதுவாக அன்றாடம் திருமாங்கல்யத்திற்கு குங்குமம் வைக்கும் போதும் சரி "ஓம் தீர்க்க சுமங்கலி தேவியை, இரட்சிப்பாய் இரட்சிப்பாய்" என்ற இந்த மந்திரத்தை மனதார சொன்னாலே போதும்.
நெற்றி பொட்டில் குங்குமம் வைக்கும் போது, "ஓம் மஹிமா சக்தியை திலக தேவியை பூரண சக்திதா நமோ நமஹ" என்ற மந்திரத்தையும்,
நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் போது, " ஓம் யாதேவி சர்வ பூதேஷூ ஸ்ரீம் ஐம் க்லீம் சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை யோகம் இரட்சிப்பாய் இரட்சியப்பாய் நமோ நமஹ"என உச்சரிக்க கணவரின் ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.
சுமங்கலி பூஜை செய்வதற்கு உகந்த நேரம்:
காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை சுமங்கலி பூஜை செய்யலாம். பூஜைகளை முடித்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு மதிய உணவு பரிமாறலாம். காலையில் சுமங்கலி பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்து, சுமங்கலி பெண்களுக்கு இரவு உணவு பரிமாறலாம். சுமங்கலி பூஜையை ஆடி ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய முடியாதவர்கள் ஆடி வெள்ளி நாளிலும் செய்து பலன் பெறலாம்.
சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து சுமங்கலி பூஜை செய்ய முடியாதவர்கள், பூஜையறையில் ஒரு மனை போட்டு, மாக்கோலமிட்டு, அந்த மனையில் அம்பிகையின் சிலையோ அல்லது திருவுருவப்படத்தையோ வைத்து மலர் தூவி, தூபமேற்றி வழிபடலாம். அவ்வாறு வழிபடும் போது நித்திய சுமங்கலியான தாயே, உன் மகளான எனக்கும் நித்திய சுமங்கலி வரத்தை தந்தருள வேண்டும் என்று மனமுருகி வேண்டிக்கொள்ளுங்கள். அந்த அன்னையின் அருள் என்றென்றும் உங்களோடு நிலைத்திருக்கும்.
- சுமங்கலி பூஜையை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
- பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களை சக்தியின் வடிவமாக கருதி, அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும்
'சுமங்கலி' என்றால் `மங்கலம் நிறைந்தவள்' என்று பொருள். திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், திருமணமாகாத பெண்கள் திருமணத் தடை, தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும் நடத்தப்படும் பூஜையே, சுமங்கலி பூஜையாகும்.
சுமங்கலி பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நடத்துவதால் இது சக்தி வழிபாடாக பார்க்கப்படுகிறது. இந்த சுமங்கலி பூஜையை ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் ராகு காலம் இல்லாத நேரத்தில் நடத்தலாம். அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும். கரிநாளாக இருக்கக்கூடாது. ஆடி மாதம், நவராத்திரி நாட்கள் ஆகியவை இந்த பூஜை நடத்த விசேஷமாகும். அதிலும் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சுமங்கலி பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
இந்த சுமங்கலி பூஜையை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். சுமங்கலி பூஜை செய்பவர், தமது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாசலில் தோரணங்கள் கட்டி, மாக்கோலம் இட்டு வீட்டை அழகுப்படுத்த வேண்டும். பூஜை செய்பவர்கள், தங்களால் எத்தனை சுமங்கலி பெண்களை அழைக்க முடியுமோ அத்தனை பேரையும் அழைக்கலாம். முக்கியமாக வயதான பெரியவர்களை அழைப்பது அவசியம். ஏனென்றால் அவர்களது ஆசீர்வாதம் நமக்கு மிகுந்த பலனை தரும்.
பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களை சக்தியின் வடிவமாக கருதி, அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும். பூஜை நடத்துபவர் முதலில், சுமங்கலி பெண்களை நாற்காலியில் உட்கார வைத்து அவர்களது பாதங்களை தாம்பூலத் தட்டில் வைத்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு பாதத்துக்கு குங்குமம், சந்தனம் வைத்து மலர் தூவி வழிபட வேண்டும்.
அதன்பிறகு அவர்களின் கை, கால், முகங்களில் சந்தனம், குங்குமம் பூசி, தலையில் சூடிக்கொள்ள பூ கொடுக்க வேண்டும். மேலும் தங்கள் வசதிகேற்ப, தாம்பூலத் தட்டில் மஞ்சள், குங்குமம், மருதாணி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், புடவை, வளையல் போன்றவற்றை வைத்து கொடுக்கலாம். தொடர்ந்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி சுமங்கலி பெண்களுக்கும் காட்ட வேண்டும். பின்பு, அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பூஜையின் முடிவில், சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் கொடுத்து, மகிழ்ச்சியோடு அவர்களை வழி அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த சுமங்கலி பூஜையை கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து செய்வதே சிறப்பானதாகும். குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு, நம்பிக்கையுடனும், பய பக்தியுடனும் செய்ய வேண்டும். சுமங்கலி பூஜை செய்வதால் இல்லத்தில் செல்வம் பெருகும். துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும். தோஷங்கள் விலகும், குலவிருத்தி உண்டாகும்.
இந்த பூஜையை மிகவும் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றில்லை. நமது வசதிகேற்ப எளிமையாக நடத்தலாம். மிகுந்த இறைபக்தியோடு நடத்தினாலே போதுமானது.






