என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு கருங்கல்பாளையம்"

    • வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு அன்ன தானம் வழங்கப்படுகிறது.
    • பெருமாள் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சீர் கொண்டு வரப்படுவது சிறப்பு.

    ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது போல் பெரிய மாரியம்மன் கோவிலுக்கும் பல சிறப்புகள் உள்ளன. இந்த கோவில் 300 வருடம் பழமையானது.

    கோவிலின் மூலவராக பெரிய மாரியம்மன் உள்ளார். கோவிலில் அரசமர விநாயகர், முருகர், துர்க்கை அம்மன், நவக்கிரகம் போன்ற சாமி சிலைகள் உள்ளன. கோவிலில் பெரிய பாம்பு புற்று ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் ஆடி மாதம் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு அன்ன தானம் வழங்கப்படுகிறது.

    ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சீர் கொண்டு வரப்படுவது சிறப்பு. ஆடி 18 அன்று கன்னிமாருக்கு காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவிலின் முக்கிய வழிபாடாக புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியம் வேண்டி அம்மனுக்கு எண்ணை வைத்து வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பல வருடங்களாக இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் ஆடி மாதம் கோவிலில் பாம்பு புற்றில் நாக பஞ்சமி விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் முழுவதும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆடி மாதம் பெண்கள் அதிக அளவில் வந்து அம்மனை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்ற பரிகாரங்கள் செய்வார்கள்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த திருமணமான வாலிபர் திடீரென மாயமானது குறித்து அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் அரவிந்த் (வயது 24). திருமணமாகி மனைவி உள்ளார்.

    வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பிறகு வீடு திரும்பவில்லை. மாயமாகி விட்டார்.

    காணாமல் போன அன்று இரவு 10 மணிக்கு அரவிந்த் தனது மனைவியிடம் போன் செய்து நான் நீல்கிரிஸ் அருகே எல்.ஐ.சி அலுவலகம் முன்பு இருக்கிறேன். 10 நிமிடத்தில் வீட்டுக்கு வந்து விடுவேன் என்று கூறினாராம். ஆனால் அவர் இதுவரை வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து அரவிந்த் தந்தை ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி புகார் மனு அளித்துள்ளார்.
    ×