ஆன்மிகம்
மணலி புதுநகர் அய்யா வைகுண்டசாமி கோவிலில் ஆனிமாத திருவிழா
மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் ஆனி மாத திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் ஆனி மாத திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை பணிவிடை உகப்படிப்பு, பகல் பணிவிடை உச்சிபடிப்பு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அய்யாவின் திருநடையில் வைத்து தர்ம பெட்டக தர்மவான்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது. இதில் முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, எம்.சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலையில் அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.