ஆன்மிகம்
கொடியேற்றப்பட்டதையும், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்ததையும் காணலாம்.

வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-05-30 03:39 GMT   |   Update On 2017-05-30 03:39 GMT
வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வயலூர் முருகன் கோவிலில் நடைபெறுகின்ற விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து, விசேஷ அபிஷேக ஆராதனைகளும், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் மயில் கொடி ஏற்றப்பட்டு விசாக திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது. இரவில் வெள்ளி விமானத்தில் முத்துகுமாரசாமி திருவீதி உலா நடைபெற்றது.

இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி நந்தி வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். வருகிற 6-ந் தேதி காலை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி ரதாரோகணம் எனும் தேரோட்டம் நடைபெறும். இதில் அன்று மாலை 4.31 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Tags:    

Similar News