என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வயலூர் முருகன் கோவில்"
- இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் தீர்த்தவாரி நடக்கிறது.
- நாளை(திங்கட்கிழமை) சங்காபிஷேகமும், தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
திருச்சி அருகே குமாரவயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி வீதி உலா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து 'அரோகரா' கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோவில் மாட வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.
தேரோட்டம் மற்றும் வைகாசி விசாக திருவிழாவிற்காக சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வைகாசி விசாகமான இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் தீர்த்தவாரி நடக்கிறது. பகல் 12 மணியளவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் மற்றும் அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
நாளை(திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சங்காபிஷேகமும், இரவு 8 மணி அளவில் மின்விளக்கு அலங்காரம் மற்றும் பூ அலங்காரத்துடன் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி ஆளும் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- நாளை பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
- நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம் நடக்கிறது.
திருச்சி அருகே குமாரவயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவில் ஒவ்வொரு வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
நேற்று குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இதில் மாலை 4 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி தேரில் எழுந்தருள செய்து, கோவில் மாடவீதிகளில் தேர் பவனி வரும். நாளை(ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வருதல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சங்காபிஷேகமும், இரவு 8 மணி அளவில் மின்விளக்கு அலங்காரம் மற்றும் பூ அலங்காரத்துடன் தெப்ப உற்சவமும் நடக்கிறது.
14-ந் தேதி இரவு 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி ஆளும் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தேரோட்டம் மற்றும் விசாக திருவிழாவிற்காக சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின்பேரில் உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்