search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
    X
    வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

    வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

    வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விவசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    திருச்சியை அடுத்த குமாரவயலூரில் பிரசித்திபெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகப்பெருமான் அருணகிரிநாதரின் நாவில் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழ் பாட அருளியச் செய்த தலமான இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் இரவு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமியின் வீதி உலா நடக்கிறது.

    9-ம் திருநாளான வருகிற 11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் ரதாரோகணம் எனப்படும் தேரோட்டம் மாலை 4 மணிக்கு மேல் நடக்கிறது. 12-ந்தேதி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடக்கிறது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி வலம் வருவர். 13-ந்தேதி மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், 14-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்குடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின் பேரில், உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×