சினிமா

பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2018-12-09 11:03 GMT   |   Update On 2018-12-09 11:03 GMT
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி நடித்துள்ள பேட்ட படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Petta #Rajinikanth
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. 2019 பொங்கல் தினத்தன்று இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள்.

மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

படத்தில் இருந்து மரண மாஸ், உலாலா என இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் அனிருத்தின் இசை கச்சேரியும் இடம்பெறுகிறது.


இந்த நிலையில், பேட்ட படத்தின் வடக்கு ஆற்காடு,தெற்கு ஆற்காடு, செங்கல்பட்டு, மதுரை, சேலம் பகுதிகளின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியிருக்கிறது. 2013-ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி வைத்ததில் மகிழ்ச்சி என்று உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Petta #Rajinikanth

Tags:    

Similar News