search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Sethupathi"

    • மிர்ச்சி சிவாவுடன் ஹரிஷா, ராதா ரவி, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர், ரகு ஆகியோர் நடித்துள்ளனர்.
    • இந்த பாடலை பிரேம் ஜி, ஸ்டீபன் செக்கரியா மற்றும் கர்ணன் கணபதி இணைந்து பாடியுள்ளனர்.

    சூது கவ்வும் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். எட்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார். மிர்ச்சி சிவாவுடன், ஹரிஷா, ராதா ரவி, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர், ரகு ஆகியோர் நடித்துள்ளனர்.

    சூது கவ்வும் 2 படத்தின் முதல் பாடலான 'வீ ஆர் நாட் தி சேம்' சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான 'மண்டைக்கு சூரு ஏறுதே' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

    இந்த பாடலை பிரேம் ஜி, ஸ்டீபன் செக்கரியா மற்றும் கர்ணன் கணபதி இணைந்து பாடியுள்ளனர்.

    ஸ்டீபன் செக்கரியா சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் பாடகர். அவர் எழுதி பாடிய உசுரையே தொலச்சேன், சகியே, விலகாதே, அடிப்பெண்ணே போன்ற பாடல்கள் யூடியூபில் மிகவும் வைரல்.

    ஸ்டீபன் செக்கரியா இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.
    • நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    முன்னதாக, நடிகர் சிவகாத்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். நடிகர் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    அதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குசாவடியில் அலையென திரண்ட மக்களுக்கு மத்தியில் வாக்களித்தார். நடிகர் சூர்யா, கார்ஹ்த்டி, சிவகுமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

    நடிகர்களான விக்ரம், விஜய் சேதுபதி, செல்வ ராகவன், தனுஷ், வெற்றி மாறன் ரத்ன குமார், கமல்ஹாசன், திரிஷா, ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் அவர்களின் ஜனநாயக கடமையை சிறப்பாக செய்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத்.
    • ஒரு ஹைப்பர் லிங்க் படமாக உருவாகியுள்ளது

    ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் பரத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் . இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

    பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத். அதற்கடுத்து பட்டியல், எம் மகன், வெயில், வானம், காளிதாஸ், 555 போன்ற பலப் படங்களில் நடித்தார்.

    இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. "ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்பொழுது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர் ,மற்றும் ஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    எதிர்பாராத விதமாக கிடைக்கும் துப்பாக்கியை வைத்து நான்கு கதாப்பாத்திரத்திற்குள் ஒரு ஹைப்பர் லிங்க் கதைக்களத்தோடு  உருவாகியுள்ளது இத்திரைப்படம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
    • இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.




    இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சமீபத்தில் வெளியானது. அதில். இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதி நடிப்பின் தோற்றம் அமைந்திருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

    மேலும், இந்த படத்தில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது.



    இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படம் மே 16-ம் தேதி 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தென்மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
    • அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார்.

    தனக்கென ஒரு பாணியில் நடிப்பை வெளிப்படுத்துபவர் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு வெளியான தென் மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.

    மாஸ்டர், விக்ரம், பேட்ட மற்றும் ஜவான் திரைப்படங்களில் நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார். கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைக்க தினேஷ் புருஷோத்தம்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியான நிலையில். இத்திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜீவா நடிப்பில் வெளிவந்த ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

    ஆர்யா, சந்தானம் , நசிரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் 2013 வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் அட்லீ.

    பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெறி, 2017 ஆம் ஆண்டு மெர்சல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பிகில் என அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை இயக்கினார் அட்லீ.

    3 படங்களுமே வசூலை அள்ளியது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐகானான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" படத்தை இயக்கி பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

    நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுக்கோண் நடித்த இப்படம் இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.

    இதற்கிடையே, அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

    அந்த வகையில், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் மூலம் தமிழ்த்திரை துறையில் அறிமுகமானார்.

    இந்நிலையில், பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு இயக்குனர் அட்லீ-யின் "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைதொடர்ந்து, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து தமிழ் படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜீவா நடிப்பில் வெளிவந்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது அவ்வளவு பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டுப் போடாமல் இருப்பது
    • நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போகிறோம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதற்கு முன்னாடி அவர்கள் என்ன செய்தார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்து ஓட்டு போடுங்கள்

    தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில், "நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தால் நமக்கென்ன, இல்லை யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவோம். ஒட்டு போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. இது போன்ற மனநிலையை தூக்கி ஓரமா வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லையென்றாலும் நமது குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நமது அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.

    காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்வளவு பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டுப் போடாமல் இருப்பது. உங்களுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என யாராக இருந்தாலும் சரி, அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவர்களால் நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்கள். அதில் நம்முடைய சுயநலமும் இருக்கிறது. நாம் எல்லாரும் சேர்ந்தது தானே நாடு.

    நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போகிறோம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதற்கு முன்னாடி அவர்கள் என்ன செய்தார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்து ஓட்டு போடுங்கள். இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லை என்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டுப் போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்கள். தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்கள்" என்று பேசியுள்ளார்.

    • அந்தோணிதாசன் மற்றும் எட்வின் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்
    • சூது கவ்வும் 2 படத்தின் முதல் பாடலான 'வீ ஆர் நாட் தி சேம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

    சூது கவ்வும் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.

    இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.

    இந்நிலையில், சூது கவ்வும் 2 படத்தின் முதல் பாடலான 'வீ ஆர் நாட் தி சேம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடலின் வரிகள் காமெடியாகவும் அதே சமயம் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது. அந்தோணிதாசன் மற்றும் எட்வின் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். லா. வரதன் இப்பாடலிற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். எட்வின் லூவிஸ் விஸ்வனாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    . சூது கவ்வும் முதல் பாகத்தின் பாடல்கள் ஹிட்டானது போல் இப்படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என மக்களிடம் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.
    • இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.

    சூது கவ்வும் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.

    இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.

    இந்நிலையில், சூது கவ்வும் 2 படத்தின் முதல் பாடலான வீ ஆர் நாட் தி சேம் என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது. சூது கவ்வும் முதல் பாகத்தின் பாடல்கள் ஹிட்டானது போல் இப்படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என மக்களிடம் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

    இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும்
    • இப்படத்தில் நடிகர் மிர்சி சிவா, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

    இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன் மற்றும் சஞ்சிதா செட்டி முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்து இருந்தனர். நலன் குமாரசாமி இப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    தமிழின் சிறந்த ப்ளாக் க்யூமர் திரைப்படங்களில் ஒன்றாக சூது கவ்வும் இன்றும் கருதப்படுகிறது.

    இதில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சூது கவ்வும் படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக கடந்த ஆண்டு  படக்குழுவினர் அறிவித்தனர். இரண்டாம் பாகத்தை இயக்குனர் எம். எஸ் அர்ஜூன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் மிர்சி சிவா, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நேற்று ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜில் 10000 மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டனர். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மற்றும் படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தை தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜுடன் இணைந்து சி.வி.குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என தெரிவித்தார் சி.வி.குமார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நலன் குமாரசாமி இக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானது
    • இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது

    இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானது. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள அந்த போஸ்டர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

    இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்
    • 'ஆக்‌ஷன்' காட்சிகள் நிறைந்த படமாக உருவாக உள்ளது

    பிரபல நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள "வளையம்" படத்தின் பூஜை நடந்தது. இதில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2012 -ல் வெளியான "அட்டகத்தி" படத்தின் ஐஸ்வர்யாராஜேஷ் நடித்து மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார்.அதன்பின் "காக்காமுட்டை" படம் அவருக்கு மேலும் புகழை கொடுத்தது.ஐஸ்வர்யாராஜேஷ், தற்போது முதன்மையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    இந்தநிலையில் "வளையம்" என்ற புதியபடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.இந்தபடத்திற்கான பூஜை தொடங்கியது.ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இது உருவாக உள்ளது.ஜி.டில்லிபாபுவின் ஆக்சஸ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் மனோபாரதி இதனை இயக்குகிறார்.இதில் 'தேவ்' என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.இதில் சேத்தன், தமிழ், பிரதீப்ருத்ரா, ஹரிஷ்பேராடி, சுரேஷ்மேனன் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர்.

    ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். சென்னையில் நடந்த இந்தப்பட பூஜையில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

     

    ×