சினிமா

கருணாநிதி மறைவு - ஸ்டாலினுக்கு நேரில் ஆறுதல் கூறிய கார்த்தி

Published On 2018-08-10 12:46 GMT   |   Update On 2018-08-10 12:46 GMT
மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் நடிகர் கார்த்தி. #RIPKarunanidhi
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 7ம் தேதி காலமானார். இவருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள், கமல்ஹாசன், ரஜினி காந்த், அஜித் உள்ளிட்ட பல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் பலர் நேரில் இரங்கல் தெரிவித்தர்.

பின்னர் மெரினாவில் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராஜாஜி அரங்கத்திற்கு வர இயலாத பிரபலங்கள் மெரினாவில் உள்ள சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். இந்நிலையில், நடிகர் கார்த்தி, கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது இல்லத்திற்கு சென்று ஸ்டாலின் மற்றும் உதயநிதியை சந்தித்து ஆறுதல் கூறினார்.



நேற்று மதியம் நடிகை திரிஷா மெரினாவிற்கு சென்று கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News