சினிமா

மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களை தேடுகிறேன்: சமந்தா

Published On 2017-05-22 09:49 GMT   |   Update On 2017-05-22 09:49 GMT
விஜய்யின் 61-வது படம் உள்ளிட்ட 6 படங்களில் நடித்து வரும் சமந்தா மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
சமந்தா தற்போது விஜய்யின் 61-வது படம், ‘இரும்புத்திரை’, ‘சாவித்ரி’, 2 தெலுங்கு படங்கள் என்று பிசியாக இருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் நடிக்க இருக்கும் படத்துக்காக சிலம்பம் கற்று வருகிறார். தற்போது அழுத்தமான வேடங்களில் நடிப்பதை மட்டுமே விரும்புகிறார். அது போன்ற படங்களைத் தான் ஏற்கிறார். இது பற்றி கூறும் சமந்தா...

“ஒரு நல்ல பாத்திரத்தில் நடிப்பதற்காக எவ்வளவு ‘ரிஸ்க்' எடுக்கவும் தயாராக இருக்கிறேன். இதற்கு முன்பு சில படங்களில் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். அதற்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்திருக்கிறது. எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருக்கிறது. என்றாலும், நான் கவலைப்படவில்லை. என் வேலையை சரியாக செய்ததாகவே கருதுகிறேன்.



சில பாத்திரங்கள் மனதளவில் திருப்தி கொடுக்கும் போது பெரிய மனநிறைவு கிடைக்கும். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அந்த திருப்திக்கு ஈடாகாது. இப்போது பணம் என்பதை கடந்து, ஒரு நடிகையாக என்னை திருப்தி படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை தேடுகிறேன்” என்கிறார்.
Tags:    

Similar News