ஆட்டோமொபைல்
2021 ஸ்கோடா ஆக்டேவியா

விரைவில் இந்தியா வரும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா

Published On 2021-03-18 08:27 GMT   |   Update On 2021-03-18 08:27 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் 2021 ஆக்டேவியா மாடல் இந்திய வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


ஸ்கோடா இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை இதுவரை பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யவில்லை. அந்நிறுவனத்தின் பிரபல செடான் மாடலான ஆக்டேவியா புது பொலிவுடன் விரைவில் இந்தியா வரும் என பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தது.

அந்த வரிசையில், புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் இரண்டு மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சர்வீஸ் மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தெரிவித்து இருக்கிறார். 



முன்னதாக புதிய ஆக்டேவியா மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. மேலும் புதிய தலைமுறை ஆக்டேவியா மாடல் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இந்த மாடலின் முன்புறம் புது வடிவமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது பிஎஸ்4 மாடலைவிட மெல்லியதாக காட்சியளிக்கிறது.

இத்துடன் முன்புற பம்ப்பர் டிசைன் மாற்றப்பட்டு, புதிய மாடலில் அகலமான ஏர் டேம், எல்இடி பாக் லேம்ப் மற்றும் மெல்லிய குரோம் ஸ்ட்ரிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லேம்ப்களும் மெல்லிய எல்இடி யூனிட்கள் ஆகும். பின்புறம் கூர்மையான பூட்-லிட் வழங்கப்படுகிறது. இத்துடன் புது அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News