25.3.2024 முதல் 31.3.2024 வரை
மனோபலம் கூடும் வாரம். ராசிக்கு செவ்வாய் பார்வை. ஜோதிட ரீதியாக ராசியையோ லக்னத்தையோ பார்க்கும் கிரகங்களுக்கு ஜாதகரின் மனோநிலையை மாற்றும் வல்லமை உண்டு. இப்போது உங்கள் ராசியை 7,12-ம் அதிபதி செவ்வாய் பார்ப்பதால் மனதில் பதிந்த கோழைத்தன்மை விலகும். எதையும் எதிர் கொண்டு சாதிக்கும் மனோ வலிமை மேலோங்கும். எது நடந்தாலும் பரவாயில்லை நான் சாதித்து காட்டுவேன் என்ற தன்னம்பிக்கை கூடும்.தொழிலில் நிலவிய பிரச்சினைகள் அகலும். அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும்.தாய் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும்.
உங்களின் நேர்மறையான அணுகுமுறை சுற்றத்தாரிடம் நன்மை பெற்றுத் தரும். தாய் வழி உறவனர்களால் சில மனம் மகிழும் நல்ல சம்பவங்கள் நிகழும். ராசி அதிபதி சுக்ரன் உச்ச நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சி னைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும். மன அமைதி யையும், ஆனந் தத்தையும் அதிகரிக்க கற்பக விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406