null
29.04.2024 முதல் 05.05.2024 வரை
லாபகரமான வாரம். ராசியில் குரு சஞ்சரிப்பதால் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும் . குடும்பத்தில் நிம்மதியும் சந்தோசமும் அதிகரிக்கும். மனக்குழப்பம், டென்ஷன் குறையும். போட்டிகள், எதிர்ப்புகள் விலகும். சொந்த ஊருக்கு மாற்றலாகி குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வீர்கள்.
வருமானத்தில் நிலவிய பற்றாக்குறை அகலும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் தாமாக விலகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. புத்திர பிராப்தம் கிடைக்கும். திருமண முயற்சிகள் நிறைவேறும். பிள்ளைகள் தீய சகவாசங்களில் இருந்து விடுபடுவார்கள். கவுரவப் பதவிகள் கிடைக்கும்.
தந்தையிடம் நிலவிய சச்சரவுகள் விலகி நன் மதிப்பும் பாசமும் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டத்திற்கு வாய்ப்புள்ளது. வழக்குகள் தள்ளுபடியாகும். கூடுதல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம். ஆன்மீகச் சிந்தனைகள், பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். உயர்கல்வி முயற்சி வெற்றி தரும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும்.
30.4.2024 அன்று காலை 10.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். பிரயாணங்களை ஒத்தி வைக்கவும். வெள்ளிக்கிழமை ஸ்ரீ தனலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406