என் மலர்tooltip icon

    ரிஷபம் - வார பலன்கள்

    ரிஷபம்

    வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை

    27.4.2025 முதல் 03.5.2025 வரை

    எண்ணங்கள் நிறைவேறும் வாரம். ஜென்ம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் முடிவிற்கு வரப் போகிறது. வாக்குத் திறமையால் லாபம் ஈட்டுவீர்கள். பணத்தட்டுபாடு சீராகும். பங்குச் சந்தையில் ஆர்வம் குறைப்பது நல்லது. புதிய கூட்டுத் தொழில் முயற்சி நிறைவேறும். தொழில், வியாபாரம், வேலையில் ஏற்பட்ட பின்னடைவுகள் நீங்கும்.

    சக பணியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதில் நாட்டம் மிகுதியாகும். வீடு, வாகன பிராப்தம் உண்டு. இடமாற்றம், வீடு மாற்றம் பதவி மாற்றம் வரும். ஆரோக்கிய தொல்லை அகலும். மருத்துவ செலவு குறையும். சகோதர, சகோதரிகள் அல்லது தந்தையின் கடன் மற்றும் ஜாமீன் தொகைக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் உண்டாகும்.

    குடும்ப ஒற்றுமையை சிதைத்த எதிரிகள் இருந்த இடம் தெரியாது.திருமண முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். சிதைந்த கூட்டுக் குடும்பங்கள் அன்பை பரிமாறுவார்கள். உயர் கல்வி முயற்சி நிறைவேறும். மறுமண முயற்சி சித்திக்கும். தினமும் லலிதா சகஸ்ஹர நாமம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை

    20.4.2025 முதல் 26.4.2025 வரை

    லாபகரமான வாரம். லாப ஸ்தானத்தில் 4 கிரகச் சேர்க்கை. தடைபட்ட சொத்து விற்பனை சித்திக்கும். வீடு கட்டும் பணி துரிதமடையும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கி நிம்மதி பிறக்கும். தொழிலில் நிலவிய மந்த நிலை மாறும். சிலருக்கு பினாமிச் சொத்து கிடைக்கும். சிலருக்கு உழைப்பில்லாத அதிர்ஷ்ட வருமானத்தில் நாட்டம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதியில் நிலவிய சட்டச் சிக்கல்கள், வழக்குகள் முடிவுக்கு வரும்.

    ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். கடன் தொல்லை கட்டுக்குள் வரும். வராக்கடன்கள் வசூலாகும். நிலுவையில் உள்ள சில முக்கிய பணிகளை இப்பொழுது நடத்தி முடிக்கலாம். கூட்டுத் தொழிலில் நிலவிய கருத்து வேறுபாட்டில் புரிதல் உண்டாகும். பெண்கள் முன்னேற்ற பாதையை நோக்கி வெற்றி நடை போடுவார்கள்.

    பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும். சில மாணவர்கள் பள்ளி மாறலாம். 20.4.2025 அன்று மாலை 6.04 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும். காரியத் தடை ஏற்படலாம். உறவுகளுடன் கருத்து வேறுபாடு வரலாம். பிரதோஷ வழிபாடு சிறப்பு.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை

    13.4.2025 முதல் 19.4.2025 வரை

    வளமான எதிர்காலம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வக்ர நிவர்த்தி பெறுவதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்புகள் அகலும். உயர் அதிகாரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதியாக பணிபுரிய முடியும். சுற்றமும், நட்பும் நிரம்ப பெற்றவர்களாக இருப்பீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாகவே கருதுவீர்கள்.

    பழைய சாஸ்திரங்கள், பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கூடும். உடல் நிலை சீராகும். தீராத பிணிகளும் தீரும். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான சட்டச் சிக்கல் தீரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். ஆரோக்யம் மேம்படும். லாபம் அதிகரிக்கும். வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். சிலரின் பிள்ளைகளுக்கு அரசாங்கப் பணிதேடி வரும். 18.4.2025 அன்று காலை 8.21 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது. ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்துரு. எனவே பிறரின் காரியங்களில் அவசரப்பட்டு மூக்கை நுழைப்பதை தவிர்க்கவும். மகா விஷ்ணுவை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை

    06.4.2025 முதல் 12.4.2025 வரை

    எடுக்கும் அனைத்து முயற்சியிலும் வெற்றி பெறும் வாரம். 2,5-ம் அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெறுவதால் அனுகூலமற்ற காரியங்களைக் கூட சுமூகமாக முடித்துக் காட்டுவீர்கள். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும்.தன வரவு திருப்தி தரும். குடும்ப முன்னேற்றம் கூடும். மாமன், மைத்துனர் வழி மனக்கசப்புகள் மாறும். சுபமங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய வேலை முயற்சிகள் பலிக்கும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும்.

    சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். சிலர் புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். சிலரின் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். திருமணத் தடை அகன்று நல்ல வரன்கள் வீடு தேடி வரும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள் வீர்கள். நவகிரக புதன் பகவானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை

    30.3.2025 முதல் 5.4.2025 வரை

    கடன் தீர்க்க உகந்த காலம். தற்போது ராசியில் உள்ள குருவிற்கு சனி பார்வை கிடைப்பது தர்ம கர்மாதிபதி யோகம். இந்த கிரக நிலவரம் 14-5- 2025 வரை நீடிக்கிறது. இது கடன் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து மீள பிரபஞ்சம் கொடுத்த சந்தர்ப்பமாகும் எவ்வளவு கடன் சுமையில் உள்ளவர்களும் இந்த காலகட்டத்தில் கடனை தீர்க்கக்கூடிய மார்க்கம் தென்படும். அதேபோல் எவ்வளவு திருமணத் தடை இருப்பவர்களுக்கும் இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்து முடியும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு தன ஸ்தானத்திற்கு குரு சென்ற பிறகும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும்.

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். பெற்றோர்கள், பெரியவர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தடைபட்ட உயர்கல்வி வாய்ப்பு தற்போது கை கூடி வரும். வெளிநாடு செல்வதில் நிலவிய தடைகள் அகலும். பாஸ்போர்ட் விசா சார்ந்த பிரச்சினைகளை முடிவுக்கு வரும்.புதிய சொத்துக்கள் சேரும். நோய்க்கு உரிய வைத்தியம் கிடைக்கும். மன நிம்மதி கூட விநாயகர் அகவல் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    30.3.2025 முதல் 05.4.2025 வரை

    கடன் தீர்க்க உகந்த காலம். தற்போது ராசியில் உள்ள குருவிற்கு சனி பார்வை கிடைப்பது தர்ம கர்மாதிபதி யோகம். இந்த கிரக நிலவரம் 14-5- 2025 வரை நீடிக்கிறது. இது கடன் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து மீள பிரபஞ்சம் கொடுத்த சந்தர்ப்பமாகும் எவ்வளவு கடன் சுமையில் உள்ளவர்களும் இந்த காலகட்டத்தில் கடனை தீர்க்கக்கூடிய மார்க்கம் தென்படும்.

    அதேபோல் திருமண தடை இருப்பவர்களுக்கும் இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்து முடியும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு தன ஸ்தானத்திற்கு குரு சென்ற பிறகும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். பெற்றோர்கள் பெரியவர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தடைபட்ட உயர்கல்வி வாய்ப்பு தற்போது கை கூடி வரும். வெளிநாடு செல்வதில் நிலவிய தடைகள் அகலும். பாஸ்போர்ட், விசா சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் சேரும். நோய்க்கு உரிய வைத்தியம் கிடைக்கும். மன நிம்மதி கூட விநாயகர் அகவல் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை

    23.3.2025 முதல் 29.3.2025 வரை

    உற்சாகமான வாரம்.லாப ஸ்தானத்தில் நிற்கும் சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஆன்ம பலம் பெருகும். மனக் குழப்பம் நீங்கும். ஏற்றங்களும் நல்ல மாற்றங்களும் வந்து கொண்டே இருக்கும்.குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில் வாய்ப்புகள் தேடி வரும். மனைவி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பணம் தொடர்பான அனைத்து சர்ச்சைகளும் தீரும். மகளின் திருமணத்திற்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சிலர் கம்பெனி சார்பாக அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும். உயர் கல்வி முயற்சி நிறைவேறும்.

    அலுவலகத்தில் விரும்பிய எதிர்பார்த்த பணி உங்களுக்கு வழங்கப்படும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். உடல் மற்றும் மனதில் உள்ள சங்கடங்கள் அகலும்.24.3.2025 அன்று காலை 10.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகளை ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செய்யவும். முக்கியமான பேச்சு வார்த்தையை ஓரிரு வாரம் தவிர்க்கவும். அமாவாசையன்று இயன்ற தான தர்மம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை

    16.3.2025 முதல் 22.3.2025 வரை

    லாபகரமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் சிலருக்கு உழைக்காத அதிர்ஷ்ட வருமானம் கிடைக்கும். தோற்றம் பொலிவு பெறும். ஆன்ம பலம் பெருகும். உங்கள் இனத்தவர் மத்தியில் பெரிய மனிதராக இருப்பீர்கள். புத்திக் கூர்மையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பீர்கள். பிள்ளைகளுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். பிள்ளைப்பேறில் இருந்த குறைகள் அகன்று குடும்பம் தழைக்க அடுத்த வாரிசு உருவாகும். விண்ணப்பித்த அரசு உத்தியோகத்திற்கு சாதகமான பதில் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வால் உள்ளம் மகிழும்.

    சிலருக்கு புதிய தொழில் கிளைகள் துவங்கும் வாய்ப்புகள் உள்ளது. குல தெய்வ கோவில் பிரார்த்தனைகளை நிறைவு செய்யும் வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். திரைக்கலை ஞர்களின் தனித்திறமை மிளிரும். 22.3.2025 அன்று நள்ளிரவு 1.46 மணிக்கு சந்திராஷ்டமம் துவங்குவதால் எந்த விஷயத்தையும் கணவன், மனைவி திட்டமிட்டு செய்வது நன்மையை அதிகரிக்கும். பஞ்சமுக நெய் தீபம் ஏற்றி வெள்ளிக் கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை

    9.3.2025 முதல் 15.3.2025 வரை

    நிறைந்த மனதோடு நிம்மதியாக செயல்படும் வாரம். 11-ம்மிடமான உப ஜெய ஸ்தானமான லாப ஸ்தானத்தில் ராசி அதிபதி சுக்ரன் வக்ரம் பெறு வதால். பல விதமான கிரகங்கள் ரிஷபத்திற்கு மிக மிக சாதகமாக உள்ளது. தொழிலில் புதிய திருப்பங்கள் உண்டாகும். அதிர்ஷ்டமும் கவுரவப் பதவிகளும் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டத்தால் ஏற்றம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் சுபச் செலவு ஏற்படும். வீடு, வாகனம்,பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடும் நேரம்.

    இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை இனி இல்லை. சின்னத்திரை, பெரியதிரை கலைஞர்களின் திறமைகள் போற்றப்படும்.பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும்.உயர் கல்வி முயற்சி சித்திக்கும்.உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக் கவலை மறையும். எதிரிகள் விலகுவார்கள். கடந்தகால வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மாசி மகத்தன்று பன்னீர் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை

    02.03.2025 முதல் 08.03.2025 வரை

    வராக்கடன்கள் வசூலாகும் வாரம். ராசியில் உள்ள அஷ்டம குருவின் ஆதிக்கத்தால் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவதாக மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அதிர்ஷ்டப் பொருட்களை வாங்குவீர்கள்.

    வராத கடனும் வசூலாகும். கடன் சுமை குறையும். மன உளைச்சல், மனக்குழப்பம் அகலும். பிள்ளைபேறு உண்டாகும். லாபச் சனி துவங்குவதால் வேலை பளு அதிகமாகும். கவுரவம் நிலைத்திருக்கும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

    திருமண முயற்சிகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். சொந்தமனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். பெண்களுக்கு தாய் வீட்டுச் சீதனம், பாகப் பிரிவினை பணம், சொத்து கிடைக்கும்.

    சிலர் வீடு மாற்றம் செய்யலாம். தலைமறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் உண்மையான அன்பை புரிந்து கொள்வார்கள். தாய், தந்தையே தெய்வம் என்ற உணர்வு மேலோங்கும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். அஷ்ட லட்சமிகளை வழிபட மகிழ்ச்சி கூடும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை

    23.2.2025 முதல் 01.03.2025 வரை

    அதிர்ஷ்டமான வாரம். 2,5-ம் அதிபதி புதன் நீச்ச பங்க ராஜ யோகம் பெறுகிறார். இது ரிஷபத்திற்கு மிகப் பெரிய வாழ்வியல் மாற்றங்கள் உண்டாக்கும் காலம். பிரிந்து சென்ற உறவுகள் தேடி வருவார்கள்.பழகிய வட்டாரத்தில் மதிப்பும், அந்தஸ்தும் கூடும். தொழிலில் நிலவிய தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும்.

    பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். 12 ராசிகளில் வரக் கூடிய சனிப் பெயர்ச்சியில் அதிக சுப பலன்களைப் பெறப் போவதும் ரிஷப ராசிதான். கடன்கள் படிப்படியாக குறையத் துவங்கும். மறுமண முயற்சிகள் கைகூடும்.

    எலியும், பூனையுமாக இருந்த தம்பதிகள் நண்பர்களாக, காதலர்களாக மாறுவார்கள். வம்பு, வழக்குகளில் இருந்த இழுபறி நிலைமாறி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக முடியும். 25.2.2025 அன்று 12.56 காலை வரை சந்திராஷ்டமம் உள்ளது. ஓய்வு நேரம் குறையும்.

    தேவையற்ற அலைச்சல் டென்சன், உடல் சோர்வு ஏற்படும். பேச்சால் வீண் பிரச்சனை ஏற்படும் என்பதால் தேவையில்லாத பேச்சினைத் தவிர்க்கவும். சிவராத்திரியன்று பஞ்சாமிர்த அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை

    16.2.2025 முதல் 22.2.2025 வரை

    நம்பிக்கை அதிகரிக்கும் வாரம். 2, 5-ம் அதிபதி புதன் கேந்திரம் ஏறி சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகம் ஏற்பட்டுள்ளது. தடைபட்ட பாக்கியங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் முயற்சிக்க உகந்த அற்புதமான நேரம். முன்னோர்களின் நல்லாசியால் பூர்வ புண்ணிய பலத்தால் சொத்துத் தகராறுகள் அகலும்.

    திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என அவரவர் வயதிற்கேற்ற சுப பலன்கள் உண்டு. புதிய தொழில் துவங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு தேடி வரும்.

    பொருளாதாரத்தில் நிலவிய சிக்கல், சிரமங்கள் விலகி பொருள் வரவு அதிகரிக்கும். வராக்கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும். அடமானப் பொருட்களை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். 22.2.2025 அன்று மாலை 5.40 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆடம்பரச் செலவை குறைத்து எதிர் நீச்சல் போட்டால் வெற்றி நடைபோட முடியும். வீண் விரயங்கள் அதிகரிக்கும்.சிதம்பரம் நடராஜரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×