search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - வார பலன்கள்

    ரிஷபம்

    இந்த வார ராசிபலன்

    6.5.2024 முதல் 12.5.2024 வரை

    சுப விரயங்கள் மிகுதியாகும் வாரம். ராசியில் குரு. விரய ஸ்தானத்தில் சனி பார்வையில் சூரியன். புதன், சுக்ரன். விரய ஸ்தானம் பலம் பெறுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் சுழலும்.வேலை தொழில் தடைகள் நீங்கி முன்னேற்றம் உருவாகும்.வேலை இல்லாதவர்களுக்கும், வேலை இழந்த வர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும். பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேரும்.8ம்மிடம் என்பது பண பர ஸ்தானம். பண பர ஸ்தான அதிபதி குரு ராசியில் நிற்பது விபரீத ராஜ யோகம். விட்டதை பிடிக்கும் நேரம். இது ஜன்ம குரு காலம் என்று யாராவது அச்சுறுத்தினால் பயப்பட வேண்டாம். சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். வெற்றிகளை அள்ளி குவிப்பீர்கள்.

    எதையும் சமாளிக்கும் தைரியமும் ஆற்றலும் உண்டாகும். எத்தனை அலைச்சல்கள் இடமாற்றங்கள் வந்தாலும் மன உறுதியும் நம்பிக்கையும் தளராது. பூர்வீக சொத்துகள் வந்து சேரும். விட்டுக் கொடுப்பதாலும், வீண் ரோஷம் தவிர்ப்பதாலும் முன்னேற்றங்கள் அதிகரிக்கும். திருமணத் தடை அகலும். ஆண் குழந்தை பிறக்கும்.சிறு சிறு வைத்தியச் செலவு, கண் பாதிப்புகள் வந்து போகலாம். அமாவாசையன்று மகாலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிபலன்

    29.04.2024 முதல் 05.05.2024 வரை

    லாபகரமான வாரம். ராசியில் குரு சஞ்சரிப்பதால் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும் . குடும்பத்தில் நிம்மதியும் சந்தோசமும் அதிகரிக்கும். மனக்குழப்பம், டென்ஷன் குறையும். போட்டிகள், எதிர்ப்புகள் விலகும். சொந்த ஊருக்கு மாற்றலாகி குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வீர்கள்.

    வருமானத்தில் நிலவிய பற்றாக்குறை அகலும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் தாமாக விலகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. புத்திர பிராப்தம் கிடைக்கும். திருமண முயற்சிகள் நிறைவேறும். பிள்ளைகள் தீய சகவாசங்களில் இருந்து விடுபடுவார்கள். கவுரவப் பதவிகள் கிடைக்கும்.

    தந்தையிடம் நிலவிய சச்சரவுகள் விலகி நன் மதிப்பும் பாசமும் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டத்திற்கு வாய்ப்புள்ளது. வழக்குகள் தள்ளுபடியாகும். கூடுதல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம். ஆன்மீகச் சிந்தனைகள், பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். உயர்கல்வி முயற்சி வெற்றி தரும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும்.

    30.4.2024 அன்று காலை 10.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். பிரயாணங்களை ஒத்தி வைக்கவும். வெள்ளிக்கிழமை ஸ்ரீ தனலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    22.4.2024 முதல் 28.4.2024 வரை

    திடீர் ராஜயோகம் உண்டாகும் வாரம். ராசியை குரு நெருங்கிக் கொண்டிருக்கிறார். 8.11-ம் அதிபதி குரு ராசிக்குள் நுழையப் போவதால் திடீர் ராஜயோகம் உங்களை வழி நடத்தும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்வு உண்டாகும். முயற்சிகளும், எண்ணங்களும், திட்டங்களும் செயல் வடிவம் பெறும். தொழில் முன்னேற்றங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குடும்ப வாழ்க்கையில் மனநிறைவு உண்டாகும். தன வரவு தாராளமாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணியில் ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு உண்டு.

    புதிய வேலைக்கான முயற்சிகள் வெற்றி தரும். கடன் பெற்று வீடு, வாகன யோகம் அடைவீர்கள். தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசுவதால் எதையும் சமாளிக்கும் தைரியமும் இருக்கும். கண் திருஷ்டி, போட்டி உருவாகும். 28.4.2024 அன்று அதிகாலை 4.28 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பவுர்ணமியன்று ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    15.4.2024 முதல் 21.4.2024 வரை

    லாபகரமான வாரம். ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்ற ராசி அதிபதி சுக்ரன், 2,5-ம் அதிபதி புதன் மற்றும் ராகு சேர்க்கை. முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் லாப ஸ்தானம் பலம் பெறுகிறது. இது ரிஷபத்திற்கு அதிர்ஷ்டமான கால கட்டம்.

    குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தை நன்முறையில் வழி நடத்த வேண்டிய பொறுப்பை உணர்ந்து பொறுமையாக செயல்படுவீர்கள். மூத்த சகோதரர் மற்றும் சித்தப்பாவால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும்.உங்களைப் பற்றிய தவறான வீண் வதந்திகள் மறையும்.

    வீட்டிலும் அலுவலகத்திலும் உங்கள் சேவைகள் அனைவராலும் பாராட்டப்படும்.மிக முக்கிய நிர்வாக பொறுப்பில் இருப்பவர்களின் பெயர் புகழ் பரவும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்ச்சியைத் தரும்.திருமணத் தடை அகலும். சிலரின் காதல் பிரச்சினைகள் பெற்றோர்களை வேதனைப் படுத்தும்.ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    8.4.2024 முதல் 14.4.2024 வரை

    நம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று 7-ம் அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி சனியுடன் சேர்க்கை பெறுவதால் மனைவி மற்றும் தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் முயற்சி களில் ஈடுபடலாம். பெயர், புகழ், அந்தஸ்து உயரும். தொழிலில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். வர்த்தகம் லாபத்துடன் நடக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான இழுபறிகள் நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பாகப் பிரிவினை பங்கு முழுமையாக சொத்தாகவோ, பணமாகவோ வந்து சேரும். 2,5-ம் அதிபதி புதன் வக்ரமடைவதால் அதிர்ஷ்டத்தை துரத்தி ஏமாறவும் வாய்ப்பு உள்ளது. கணவன் அல்லது மனைவிக்கு உத்தியோக ரீதியான மாற்றங்கள் உண்டாகும்.

    தனித்தனியாக வேறு வேறு ஊர்களில் பணிபுரிய நேரும். ஊடகங்களில் பணிபுரிபவர்களின் தனித் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வங்கி கடனை திரும்பச் செலுத்த கால அவகாசம் கிடைக்கும். சிலருக்கு விருப்ப திருமணம் நடைபெறும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை மனக்கசப்பு முடிவுக்கு வரும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். கிருஷ்ணரை வழிபட இன்பங்கள் பெருகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    1.4.2024 முதல் 7.4.2024 வரை

    கவலைகள் மறைந்து வளம் பெருகும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் சுக ஸ்தான அதிபதியான சூரியனுடன் உச்சம் பெறுவதால். நீண்ட கால கனவுகளும், முயற்சிகளும், திட்டங்களும், லட்சியமும் நிறைவேறும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை மேலோங்கும். திடீர் அதிர்ஷ்டம், புதையல் , உயில் சொத்து, தொழில் என பல்வேறு வழிகளில் பொருள் குவியும்.

    சுக்ரன் 6ம் அதிபதியா கவும் இருப்பதால் இலவச ஆபர் கொடுப்பவர்கள், விரயாதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களின் எதிர்பாராத பொருளாதார தேவையை நிறைவு செய்ய அதிக பண உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். 3.4.2024 அன்று அதிகாலை 4.37 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதர, சகோதரிகளால் பொருள் இழப்பு, நட்டம் ஏற்படலாம். எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழக வேண்டும். நவகிரக சுக்ரனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    25.3.2024 முதல் 31.3.2024 வரை

    மனோபலம் கூடும் வாரம். ராசிக்கு செவ்வாய் பார்வை. ஜோதிட ரீதியாக ராசியையோ லக்னத்தையோ பார்க்கும் கிரகங்களுக்கு ஜாதகரின் மனோநிலையை மாற்றும் வல்லமை உண்டு. இப்போது உங்கள் ராசியை 7,12-ம் அதிபதி செவ்வாய் பார்ப்பதால் மனதில் பதிந்த கோழைத்தன்மை விலகும். எதையும் எதிர் கொண்டு சாதிக்கும் மனோ வலிமை மேலோங்கும். எது நடந்தாலும் பரவாயில்லை நான் சாதித்து காட்டுவேன் என்ற தன்னம்பிக்கை கூடும்.தொழிலில் நிலவிய பிரச்சினைகள் அகலும். அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும்.தாய் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும்.

    உங்களின் நேர்மறையான அணுகுமுறை சுற்றத்தாரிடம் நன்மை பெற்றுத் தரும். தாய் வழி உறவனர்களால் சில மனம் மகிழும் நல்ல சம்பவங்கள் நிகழும். ராசி அதிபதி சுக்ரன் உச்ச நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சி னைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும். மன அமைதி யையும், ஆனந் தத்தையும் அதிகரிக்க கற்பக விநாயகரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    18.3.2024 முதல் 24.3.2024 வரை

    ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த வாரம். தன ஸ்தான அதிபதியும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியுமான புதன் நீசம் பெற்று ராகுவுடன் இணைவதால் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு உண்டாகும்.பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நினைத்ததை உடனே நிறைவேற்ற முடியாமல் தடைகள் தாமதங்கள் ஏற்படும். வாக்கால் குடும்பத்தில் மன பேதம் உண்டாகும். பிள்ளைகளால், குடும்ப உறவுகளால் வீண் விரயம் மன வருத்தம் ஏற்படலாம். வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும். 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் வியாபாரிகளுக்கு நம்பிக்கையான புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

    பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் முதலாளிகளின் ஆதரவு கிடைக்கும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். புதிய சொத்துக்கள் சேரும். வேலை மாற்றம், இடமாற்றம் கவலையைத்தரும். திருமணம் நிச்சயமாகும். திருப்திகரமான வரன்கள் வரும். விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கும்.ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட கடன் தீர்ந்து தாராள தன வரவு உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    11.3.2024 முதல் 17.3.2024 வரை

    பொருளாதார நெருக்கடிகள் விலகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சனியுடன் சேருவதால் ரிஷபத்தினர் எதிலும் துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.பணம் பல வழிகளில் வர ஆரம்பிக்கும். குறிப்பாக தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும். தந்தைக்கும் உங்களுக்கும் உறவு நிலை சிறக்கும். சுபநிகழ்ச்சி களுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். குடும்ப சங்கடங்கள் விலகும். பொன், பொருள் சேர்க்கை அதிகமாகும்.

    புத்திரர்களால் ஆதாயம், வெற்றி கிடைக்கப்பெறும். அசையும், அசையா சொத்துகள் சேரும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் மனைவி, பிள்ளைகளுடன் ஓய்விற்கு தாய் நாடு வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் பணியில் இருந்த நெருக்கடிகள் குறையும். அடமான நகைகள் மீண்டு வரும். பெண்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகள் நிறைவேறும். உடல் நலனில் மாற்றம் உண்டாகும். தினமும் மகாலஷ்மி அஷ்டோத்திரம் படிக்க தன வரவு அதிகரிக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    4.3.2024 முதல் 10.3.2024 வரை

    குடும்பத்தில் குழப்பம் நீங்கி நன்மை உண்டாகும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி புதன் சூரியன், சனியுடன் சேர்க்கை பெறுவதால் உறவினர் மத்தியில் மரியாதை கூடும். குடும்ப ஒற்றுமை கூடும்.தொழில் வியாபாரம் சூடு பிடிக்கும். வருமானம் வழக்கம் போல் இருக்கும். அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்ற மும் உறுதி. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் அல்லது வாபஸ் பெறப்படும். தந்தை வழிச் சொத்துப் பிரச்சினைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும். புத்திரப்பேறில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும்.

    பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.திருமணத் தடை அகன்று தகுதியான வரன் அமையும். அடமானத்தில் இருந்த வீட்டை மீட்க மகள், மகனின் உதவி கிடைக்கும்.தாய், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.4.3.2024 அன்று மாலை 4.21 முதல் 6.3.2024 இரவு 10.04 வரை சந்திராஷ்டமம் இருப்பத்தால் முன் கோபத்தை தவிர்த்து பொறுமை யாக செயல்பட வேண்டும். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதால் இன்னல்கள் விலகும். சிவராத்திரியன்று பச்சை கற்பூர அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    26.2.2024 முதல் 3.3.2024 வரை

    தனித்திறமை வெளிப்படும் வாரம். ராசியை குரு நெருங்கிக் கொண்டே இருக்கிறார். அறிவு, ஞானம் மிகுதியாகும். தனித்திறமையால் நினைத்ததை சாதிக்கும் வல்லமை பெருகும். கனவுகள் நிறைவேறும்.புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும், அபிவிருத்தியும் பெருகும். புதிய வெளிநாட்டு தொழில், வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோ கத்திற்காக, தொழிலுக்காக வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும். மங்களகரமான சுபகாரியங்கள் நடக்கும். திருமணத் தடை அகலும். மறுமணத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

    வீடு, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரும். குல தெய்வ வழிபாடு நற்பலன் தரும் அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை பலன் தரும். அறுவை சிகிச்சையில் பார்வைக் குறைபாடு சீராகும். அஷ்ட லட்சுமியை வழிபட இன்பங்கள் அதிகமாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    19.2.2024 முதல் 25.2.2024 வரை

    ஆதாயமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற 7,12-ம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெறுவதால் வெளிநாட்டு வேலை. அரசு வேலை முயற்சி வெற்றி தரும். தொழில் தொடர்பான இழுபறிகள் குறையும்.பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.சிலருக்கு கவுரவ பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டசாலியாக திகழ்வீர்கள். தனித் தனியாக வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்கள் சேர்ந்து வாழும் அமைப்பு உருவாகும். புத ஆதித்திய யோகத்தால் பூர்வீக சொத்து தொடர்பான இழுபறிகள், நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பாகப் பிரிவினை பங்கு முழுமையாக சொத்தாகவோ, பணமாகவோ வந்து சேரும்.

    சகோதரரால் சகாயங்கள் உண்டாகும். சித்தப்பாவின் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.சிலர் பூர்வீகப் பங்குப் பிரிவினை பணத்தில் பழைய கடன்களை தீர்த்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கலாம். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் கூடும். நோய் தாக்கம், வைத்தியச் செலவால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். மாசி மகத்தன்று சந்தன அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×