என் மலர்tooltip icon

    ரிஷபம் - வார பலன்கள்

    ரிஷபம்

    வார ராசிபலன் 15.2.2026 முதல் 21.2.2026 வரை

    ரிஷபம்

    புதிய தொழில் சிந்தனைகள் உருவாக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியன் புதன் ராகுவுடன் இணைகிறார். செல்வாக்கு புகழ் அந்தஸ்து பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கவுரவ பதவிகள் கிடைக்கும். மனக் குழப்பங்களில் இருந்து தெளிவு பிறக்கும். தவறான விலை நிர்ணயம் உண்டாகலாம் என்பதால் சொத்து வாங்குதல் விற்றல் போன்றவற்றில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    புதிய தொழில் அபிவிருத்தி சிந்தனைகள் அதிகரிக்கும். அரசின் டெண்டர் காண்ட்ராக்ட் குத்தகைதாரர்களுக்கு உபரி வருமானம் இரட்டிப்பாகும். புதிதாக சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் புத்திர பிராப்த்தம் போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை நிலவும். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 8.2.2026 முதல் 14.2.2026 வரை

    ரிஷபம்

    இழுபறிகள் குறையும் வாரம். லாப ஸ்தானத்தில் சனி பகவான் சுயசாரத்தில் சஞ்சரிப்பதால் குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். தொழிலில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். வாராக்கடன்கள் வசூலாகும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகச் சொத்து தொடர்பான இழுபறிகள் நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பாகப்பிரிவினை பங்கு முழுமையாக சொத்தாகவோ, பணமாகவோ வந்து சேரும். சிலர் பூர்வீகப் பங்குப் பிரிவினை பணத்தில் பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.

    பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை மனக்கசப்பு முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான முயற்சியில் தந்தை, மகனுக்கு ஒருமித்த கருத்து நிலவும். உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.12.2.2026 அன்று பகல் 1.42 மணி முதல் 15.2.2026 நள்ளிரவு 12.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களில் பின்னடைவு இருக்கும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பழகக் கூடாது. அஷ்டலட்சுமிகளை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 01.2.2026 முதல் 07.2.2026 வரை

    ரிஷபம்

    தன்னம்பிக்கை உயரும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் பத்தாம் இடமான தொழில் ஸ்தானம் சென்று ராகுவுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார். பெரிய முதலீடுகளை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டமிடுவீர்கள். கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். வீடு, மனை, பூமி தொடர்பான நெடுநாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். சிலருக்கு உஷ்ணம் சார்ந்த பிரச்சிினைகளும் ஜீரணக் கோளாறுகளும் ஏற்படும்.

    இன்னல்களை எதிர்கொள்ளும் மனோதிடம் உருவாகும். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். உயர்கல்வி முயற்சி வெற்றி தரும். பெரிய மனிதர்களின் ஆதரவில் கவுரவப் பதவி கிடைக்கும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனிற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும்.ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 25.1.2026 முதல் 31.1.2026 வரை

    ரிஷபம்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை சந்தித்த அனைத்து பிரச்சினைகளும் பனிபோல் விலகும். புதிய முயற்சிகளில் முழுமையான வெற்றிகள் உண்டாகும். கொடுத்த வாக்கையும் நாணயத்தையும் காப்பாற்றுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் விலகும். பணியில் கவுரவம் நிலைத்திருக்கும். அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.

    வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெற்றோர்கள் மீண்டும் சேருவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத இட மாற்றத்தால் குடும்பத்துடன் இணைந்து வாழ்வார்கள். சகோதர, சகோதரிகள் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகள் சித்திக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் மருத்துவத்தில் சீராகும். உயர் கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் பொறுப்புகள் கிடைக்கலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆரோக்கியம் மேம்படும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 18.1.2026 முதல் 24.1.2026 வரை

    18.1.2026 முதல் 24.1.2026 வரை

    ரிஷபம்

    தடைபட்ட பாக்கிய பலன்கள் கைகூடும் வாரம். ரிஷப ராசிக்கு 9-ம் மிடமான பாக்கியஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. வாழ்க்கை முன்னேற்றத்திற்கான புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். தன ஸ்தானத்தில் குரு நிற்பதால் எதையெதையோ செய்து நஷ்டத்தை அடைந்தவர்களுக்கு தன்னம்பிக்கையோடு பிழைக்கும் வழி தென்படும்.

    பதவி உயர்வு, ஊதிய உயர்வு என விரும்பிய மாற்றங்களால் ஏற்றம் உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். வீடு, வாகனம் தொடர்பான முயற்சியில் ஈடுபட உகந்த நேரம். தந்தை விருப்ப ஓய்வு பெறலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். நீண்ட நாட்களாக தடையான காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

    18.1.2026 அன்று மாலை 4.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணவரவில் தடை, தாமதம் ஏற்படுவதால் மன சஞ்சலம் உண்டாகும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதப்படும். பண விசயத்தில் யாரையும் நம்பக்கூடாது. தை வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாடு செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 11.1.2026 முதல் 17.1.2026 வரை

    11.1.2026 முதல் 17.1.2026 வரை

    ரிஷபம்

    முன்னேற்றமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தை நோக்கி செல்கிறார். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும்.எதிர்பார்த்த வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலருக்கு வீடு மாற்றம் வேலை மாற்றம் செய்ய வேண்டிய சூழல் வரலாம்.எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் பாசமும் மனநிறைவும் உண்டாகும்.

    குல தெய்வ அருளால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளும், சிக்கல்களும் தீரும். சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். திருமணயோகம் கை கூடி வரும்.16.1.2026 மாலை 5.48 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பதுடன் ஓய்வு நேரம் குறையும். அலைச்சல் மிகுந்த பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. நெய் தீபம் ஏற்றி அம்பிகையை வழிபடுவது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 4.1.2026 முதல் 10.1.2026 வரை

    4.1.2026 முதல் 10.1.2026 வரை

    ரிஷபம்

    குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் நின்று தனம் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவை பார்க்கிறார். குரு ராசி அதிபதியை பார்ப்பதால் வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும். வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும்.

    விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். விலை உயர்ந்த நவீன ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண தடை விலகி விவாகம் நடைபெறும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 28.12.2025 முதல் 3.1.2026 வரை

    28.12.2025 முதல் 3.1.2026 வரை

    ரிஷபம்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு சனியின் 3ம் பார்வை உள்ளது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு வக்ரமாக இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது செய்கை கோபத்தை அதிகரித்தாலும் நிதானத்தை கடைபிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

    தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. தொழில் கூட்டாளிகளிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

    ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் சீராகும். வீட்டுக்கடன் குறைந்த வட்டியில் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சொத்து தொடர்பான முக்கிய முடிவு, பத்திரப்பதிவுகளை ஓரிரு வாரங்களுக்கு தவிர்க்கவும். நடராஜருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட எல்லா விதமான பிரச்சினைகளும் சீராகும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 21.12.2025 முதல் 27.12.2025 வரை

    21.12.2025 முதல் 27.12.2025 வரை

    ரிஷபம்

    அதிர்ஷ்டமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் செவ்வாயுடன் இணைந்து குரு பார்வை பெறுகிறார். விபரீத ராஜயோகம் கை கூடி வரப்போகிறது. அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கையில் பணம் தாராளமாக நடமாடும். வேலையில் இருந்த சிரமங்கள் குறையும். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

    மகிழ்ச்சியான சம்பவங்கள் அதிகம் நடைபெறும். கஷ்ட காலம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது. சிலர் சிறு தொழில் புதியதாக கற்று அது சார்ந்த தொழில் ஆரம்பிக்கலாம். இதுவரை வேலை கிடைக்காத மகள், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம், சுபகாரியம் தொடர்பாக இந்த வாரம் பேசி முடிக்கலாம்.

    திருமணம் முடிந்து சண்டை போட்டு பிரிந்தவர்கள் இனி சந்தோஷமாக சேர்ந்து வாழ்வார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 22.12.2025 அன்று காலை 10.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். பேச்சில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும்.மகாலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 14.12.2025 முதல் 20.12.2025 வரை

    14.12.2025 முதல் 20.12.2025 வரை

    ரிஷபம்

    மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் குரு மற்றும் சனியின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இழந்த நிம்மதி, சந்தோஷம் உங்களுக்குள் மீண்டும் குடிபுகும். தொழில் ரீதியான பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள். பதவி உயர்வு, உத்தியோகத்தில் இடமாற்றம், மற்றவர்களால் மதிக்கப்படக் கூடிய நிலை ஏற்படும்.

    இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சினையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

    வீண் செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். நிதானமாக செயல்பட்டால் அரசு வகையில் யாவும் அனுகூலமாகும். 19.12.2025 அன்று இரவு 10.51 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அன்றையதினம் உடலுக்கும் மனதுக்கும் சற்றே ஓய்வு கொடுப்பது அவசியம். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். விநாயகர் வழிபாட்டால் இன்னல்களில் இருந்து மீள முடியும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 7.12.2025 முதல் 13.12.2025 வரை

    7.12.2025 முதல் 13.12.2025 வரை

    ரிஷபம்

    தன்னம்பிக்கை நிறைந்த வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ராசிக்கு 7-ம் இடத்தில் சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். உங்கள் எண்ணங்கள், யோசனைகள் திட்டங்களை செயல்படுத்தக்கூடிய சாதகமான சூழ்நிலை உருவாகும். இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். கடன் தொல்லை இழப்புகள், விரயங்கள் குறையும்.

    தொழிலில் மூலம் மதிப்பு, மரியாதை உயரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். சொத்துக்களுக்கு நல்ல வாடகை தாரர்கள் கிடைப்பார்கள். வெளிநாட்டு வேலை முயற்சி நிறைவேறும். பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். தாயின் அன்பும் ஆசிர்வாதமும் தாய் வழிச் சொத்தும் கிடைக்கும்.

    புதிய தொழில் முயற்சிக்காக வெளியூர், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நேரும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை இழுபறியாகும். தொழில் சார்ந்த விசயங்களில் அரசின் சட்ட திட்டங்களை கடைபிடிப்பது நல்லது. குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை

    30.11.2025 முதல் 6.12.2025 வரை

    ரிஷபம்

    நல்லவிதமான மாற்றங்கள் உருவாகும் வாரம். ராசிக்கு 6-ல் ஆட்சி பலம் பெற்று நின்ற ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் 7-ம் மிடத்திற்கு சென்று ராசியை பார்ப்பார். இது ரிஷப ராசியினருக்கு இழந்த இன்பங்களை மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். எதையும் தைரியத்தோடு செய்யக் கூடிய மன பலம் அதிகரிக்கும். திறமையான பேச்சால் மற்றவர்களை வசீகரம் செய்யக்கூடிய தன்மை உருவாகும்.

    திறமைகள் அதிகரிக்கும். செயல் திறன் கூடும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன் சுமைகள் படிப்படியாக குறையும். திருமண தடை அகலும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். வேலைப்பளு குறையும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.

    புத்திர பிராப்தத்தில் நிலவிய குறைபாடுகள் சீராகும். பூர்வீகச் சொத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். அழகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பன்னீர் பூக்களால் அர்ச்சனை செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×