செய்திகள்
பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - தொழிலாளி பலி
பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஜீவா தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (43). கூலித் தொழிலாளி. இவர் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். கல்மேடு பகுதியில் அவர் வரும் போது பொன்னேரியில் இருந்து பழவேற்காட்டிற்கு சென்ற பழவேற்காட்டை சேர்ந்த யூசுப் (26) என்பவரது மோட்டார் சைக்கிளின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்த மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் இறந்துவிட்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.