search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மங்கள சண்டிகை துதி
    X

    மங்கள சண்டிகை துதி

    • பாராயணம் துதிகளில் மங்கள சண்டிகை துதி மகிமை வாய்ந்தது.
    • இதனை நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி நாளில் படிப்பது மிகவும் சிறப்பு.

    பாராயணம் துதிகளில் மங்கள சண்டிகை துதி மகிமை வாய்ந்தது.

    இதனை நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமி நாளில் படிப்பது மிகவும் சிறப்பு.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி நாளிலும் கூட இதைப் பாராயணம் செய்வதால் நன்மை உண்டாகும்.

    அம்பிகையிடம் ஏதாவது கோரிக்கை வைத்து, அது நிறைவேற தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை படிப்பதும் வழக்கம்

    மிகவும் சிறப்பு வாய்ந்த அந்த மங்கள சண்டிகை துதி வருமாறு:

    ரட்ச ரட்ச ஜகன் மாதா

    சர்வ சக்தி ஜெய துர்கா

    ரட்ச ரட்ச ஜகன் மாதா

    சர்வ சக்தி ஜெய துர்கா

    மங்கள வாரம் சொல்லிட வேண்டும்.

    மங்கள கன்னிகை ஸ்லோகம்

    இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும்.

    படைப்பவள் அவளே

    காப்பவள் அவளே

    அழிப்பவள் அவளே சக்தி

    அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே

    அடைக்கலம் அவளே சக்தி

    ஜயஜயசங்கரி கவுரி மனோகரி

    அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி

    சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி

    திருவருள் தருவாள் தேவி

    கருணையில் கங்கை

    கண்ணனின் கங்கை

    கடைக்கண் திறந்தால் போதும்

    வருவினை தீரும், பழவினை ஓடும்

    அருள் மழை பொழிபவள் நாளும்

    நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்

    காளி எனத் திரிசூலம் எடுத்தவள்

    பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்

    நாமம் சொன்னால் நன்மை தருபவள்!

    நாமம் சொன்னால் நன்மை தருபவள்!!

    Next Story
    ×