search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவில் தறிகெட்டு ஓடிய லாரியால் 14 உயிர்கள் பலி
    X

    சீனாவில் தறிகெட்டு ஓடிய லாரியால் 14 உயிர்கள் பலி

    சீனாவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்வந்த கார்களின் மீது மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. #China #Accident
    பீஜிங்:

    சீனாவின் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இதுவரை 14 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #China #Accident
    Next Story
    ×