என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரான் ராணுவ அணிவகுப்பில் 25 வீரர்களின் உயிரை பறித்த பயங்கரவாதி சுட்டுக் கொலை
Byமாலை மலர்17 Oct 2018 6:25 AM GMT (Updated: 17 Oct 2018 6:25 AM GMT)
ஈரான் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடத்தி 25 வீரர்களின் உயிரை பறித்த பயங்கரவாதி அபு ஷகா மற்றும் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Iran #MilitaryParade
தெக்ரான்:
ஈரானில் கடந்த செப்டம்பர் 22-ந்தேதி ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதில் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 25 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் ஈரானில் அரசுக்கு எதிராக இயங்கும் ஆஷ்வாஸ் தேசிய இயக்கத்தினர் பொறுப்பு ஏற்றனர். இந்த இயக்கம் எண்ணை வளம் மிகுந்த குசஸ்தான் மாகானத்தை பிரித்து தனி நாடாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடத்திய பயங்ரவாதிகளை ஈரான் அரசு தேடி வந்தது. அவர்கள் ஈராக்கில் தியாலா மாகானத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து அங்கு நுழைந்த ஈரான் ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. அதில் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அபு ஷகா மற்றும் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களில் அபு ஷகா ராணுவ அணி வகுப்பில் தாக்குதல் நடத்த முக்கிய திட்டம் வகுத்து கொடுத்தவன். #Iran #MilitaryParade
ஈரானில் கடந்த செப்டம்பர் 22-ந்தேதி ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதில் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 25 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் ஈரானில் அரசுக்கு எதிராக இயங்கும் ஆஷ்வாஸ் தேசிய இயக்கத்தினர் பொறுப்பு ஏற்றனர். இந்த இயக்கம் எண்ணை வளம் மிகுந்த குசஸ்தான் மாகானத்தை பிரித்து தனி நாடாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
சன்னி பிரிவினர் மெஜாரிட்டியாக வாழும் வசதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீர நாடுகள் தான் பயங்கரவாதிகளை தூண்டி விட்டு ராணுவ அளிவகுப்பில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என ஈரான் தலைவர் அயாதுல்லா அலி காமெனி தெரிவித்து இருந்தார். அதை சவுதிஅரேபியாவும், ஐக்கிய அரபு அமிரகமும் மறுத்தன.
இதற்கிடையே ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடத்திய பயங்ரவாதிகளை ஈரான் அரசு தேடி வந்தது. அவர்கள் ஈராக்கில் தியாலா மாகானத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து அங்கு நுழைந்த ஈரான் ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. அதில் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அபு ஷகா மற்றும் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களில் அபு ஷகா ராணுவ அணி வகுப்பில் தாக்குதல் நடத்த முக்கிய திட்டம் வகுத்து கொடுத்தவன். #Iran #MilitaryParade
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X