search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாகூரில் நவாஸ் ஷெரீப்பை வரவேற்க காத்திருக்கும் கழுதை கூட்டம் - இம்ரான்கான்
    X

    லாகூரில் நவாஸ் ஷெரீப்பை வரவேற்க காத்திருக்கும் கழுதை கூட்டம் - இம்ரான்கான்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று நாடு திரும்பும் நிலையில், அவரை வரவேற்க காத்திருப்போர் கழுதை கூட்டம் என தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித்தலைவர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார். #Pakistan #NawazSharif #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான அவென்பீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், லண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப் இன்று மாலை 6 மணியளவில் பாகிஸ்தான் வந்தடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

    அதேசமயம், பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரீப்பை வரவேற்க அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் என பலர் லாகூரில் கூடியுள்ளனர். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடையே பேசிய தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், நவாஸ் ஷெரீப்பை வரவேற்க காத்திருப்பது கழுதை கூட்டம் என கடுமையாக விமர்சித்துள்ளார். இது நவாஸ் ஷெரீப் கட்சியினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #NawazSharif #ImranKhan 
    Next Story
    ×