search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே திடீர் வெடிவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
    X

    நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே திடீர் வெடிவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

    நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் முகாம் அலுவகலம் அருகே இன்று காலை திடீரென சிறிய அளவிலான வெடிவிபத்து நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காத்மண்டு:

    நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. பிராத்நகர் என்ற பகுதியில் இந்திய தூதரகத்தின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை முகாம் அலுவலகம் அருகே சிறிய அளவிலான வெடிவிபத்து நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த வெடிவிபத்தில் யாருக்கும் காயமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இந்திய வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக கருத்து எதுவும் வெளியிடவில்லை. #TamilNews
    Next Story
    ×