என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன தலைநகரில் இடி மின்னலுடன் தொடர் மழை: 360 விமானங்கள் ரத்து
Byமாலை மலர்12 Aug 2017 3:04 PM GMT (Updated: 12 Aug 2017 3:04 PM GMT)
சீனாவில் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை பெய்து வருவதால் இன்று 360 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பீஜிங்:
சீனாவில் தலைநகர் பீஜிங்கில் இன்று இடி மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தலைநகரை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மலைப்பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்ததால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 360 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆற்றங்கரை அருகில் உள்ள ஷாங்காய், நான்ஜிங், ஹாங்சோவ் ஆகிய விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் மழை ஓரளவு தணிந்தபோதிலும், முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்தது. சுற்றுலா பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டன.
சீனாவில் தலைநகர் பீஜிங்கில் இன்று இடி மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தலைநகரை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மலைப்பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்ததால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 360 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆற்றங்கரை அருகில் உள்ள ஷாங்காய், நான்ஜிங், ஹாங்சோவ் ஆகிய விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் மழை ஓரளவு தணிந்தபோதிலும், முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்தது. சுற்றுலா பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X