என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 700 கிலோ குட்கா பறிமுதல் - 3 பேர் கைது
திருப்பூர்:
திருப்பூர் 15 வேலம் பாளையம் தியாகி குமரன் காலனியில் குடோனை வாடகைக்கு எடுத்து அங்கு குட்கா, பான்மசாலாவை பதுக்கி வைத்து சில்லறை கடைகளுக்கு சப்ளை செய்வதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அந்த குடோனை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த குடோனில் நேற்று இரவு 15 வேலம்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அங்கு 2 குடோன்கள் இருந்தது. இந்த குடோன்களில் சோதனை நடத்திய போது ஒரு குடோனில் இருந்து 250 கிலோ குட்காவும், மற்றொரு குடோனில் இருந்து 450 கிலோ குட்காவும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குட்காவை பிஸ்கெட் அட்டை பெட்டிகளில் அடைத்து பிஸ்கெட் சப்ளை செய்வது போல் கொண்டு சென்று சில்லறை கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரிய வந்தது.
இந்த குடோனை நடத்தி வந்த வட மாநில வாலிபர்கள் ஓம் பிரகாஷ், சுரேஷ், பப்பு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்