என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை அருகே யானை தாக்கி முதியவர் பலி
கோவை:
கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட எட்டிமடை அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் வேலுசாமி(வயது 62).
இவர் வீட்டு முன்பு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று நள்ளிரவு வனப் பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று குட்டியுடன் அங்கு வந்தது.
அந்த யானை, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த வேலு சாமியை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் அலறித் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்துக்கு வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பட்டாசு வெடித்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
பின்னர், வேலுசாமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்