என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரண்பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டம் - காங். கூட்டணி கட்சிகள் முடிவு
Byமாலை மலர்23 Feb 2019 9:50 AM GMT (Updated: 23 Feb 2019 9:50 AM GMT)
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சேர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #kiranbedi #Congress #Narayanasamy
புதுச்சேரி:
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுவையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், விஜயவேணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தை கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், அமைப்பு செயலாளர் அமுதவன், ம.தி.மு.க. புதுவை மாநில அமைப்பாளர் கபிரியேல், மனிதநேய மக்கள் கட்சி பஷீர் அகமது, புதிய நீதிக்கட்சி பொன்னுரங்கம், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் சஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பது குறித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றாத கவர்னர் கிரண் பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின் மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் மாளிகை முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கவர்னரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாக இன்று (நேற்று) முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
ஆனால், அவர் முதியோர் உதவித் தொகை தவிர, மற்ற கோரிக்கைகள் தொடர்பாக சாதகமான பதிலை அளிக்கவில்லை.
எனவே, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மீண்டும் போராட்டத்தை தொகுதி வாரியாகவும், ஒவ்வொரு கிராமங்களில் தெருமுனை பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வது தொடர்பான யுக்திகளை கையாளுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. கட்சி தலைவர் அறிவித்த வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவோம். என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். ஜெயலலிதாவுக்கு செய்த துரோகமாகவும் எண்ணுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #kiranbedi #Congress #Narayanasamy
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுவையில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், விஜயவேணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தை கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், அமைப்பு செயலாளர் அமுதவன், ம.தி.மு.க. புதுவை மாநில அமைப்பாளர் கபிரியேல், மனிதநேய மக்கள் கட்சி பஷீர் அகமது, புதிய நீதிக்கட்சி பொன்னுரங்கம், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் சஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பது குறித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றாத கவர்னர் கிரண் பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின் மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் மாளிகை முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கவர்னரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாக இன்று (நேற்று) முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
ஆனால், அவர் முதியோர் உதவித் தொகை தவிர, மற்ற கோரிக்கைகள் தொடர்பாக சாதகமான பதிலை அளிக்கவில்லை.
எனவே, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மீண்டும் போராட்டத்தை தொகுதி வாரியாகவும், ஒவ்வொரு கிராமங்களில் தெருமுனை பிரசாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வது தொடர்பான யுக்திகளை கையாளுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. கட்சி தலைவர் அறிவித்த வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவோம். என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். ஜெயலலிதாவுக்கு செய்த துரோகமாகவும் எண்ணுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #kiranbedi #Congress #Narayanasamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X