என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
துரோகிகளுக்கு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்- டிடிவி தினகரன் பேச்சு
கள்ளக்குறிச்சி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த 6-ந்தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
3-வது நாளான நேற்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தலூருக்கு வந்த அவர் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
தியாகதுருகத்தில் இருந்து சித்தலூர் வரை உள்ள சாலை, போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. காரணம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நியாயத்தின் பக்கம் இருப்பதால், சாலையை சீரமைக்காமல் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் இருந்து வருகிறார்கள். மக்கள் வெறுக்கும் இந்த ஆட்சி தொடரக்கூடாது என்பது தான் தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது.
இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நல்லதொரு சந்தர்ப்பமாக விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலோடு, 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வர இருக்கிறது. அந்த 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறாது.
தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. காரணம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மத்தியில் அதிக பெரும்பான்மை கிடைக்க போவதில்லை. இதனால் தமிழக மக்களாகிய நீங்கள் இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளீர்கள். உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து எங்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் நாங்கள் போராடுவோம்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.
அதனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் சின்னசேலம் பஸ் நிலையத்தில் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உச்சநீதிமன்றத்தின் 47 பக்க தீர்ப்பில் நமக்கு சாதகமாகத்தான் உள்ளது. தொடர்ந்து உரிமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடுவோம். குக்கர் சின்னம் நமக்குதான். ஆனால், விரைவில் அ.தி.மு.க. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கி விடுவார்கள்.
தமிழகம் முழுவதும் நமக்கு மக்கள் பெரும் ஆதரவையும், வரவேற்பையும் தருகிறார்கள். நியாயத்தின் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். துரோகிகளுக்கு பாடம் புகட்ட தேர்தலை எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #dinakran #parliamentelection #admk #pmmodi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்