search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நிர்மலா தேவிக்கு சிகிச்சை
    X

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நிர்மலா தேவிக்கு சிகிச்சை

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நிர்மலாதேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #NirmalaDevi
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.

    பேராசிரியை நிர்மலாதேவிக்கு முதுகுவலி ஏற்பட்டதால் சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் வலி குறையாததால் இன்று காலை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.

    அங்கு சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் மதியம் அடைக்கப்பட்டார். #NirmalaDevi

    Next Story
    ×