search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் தொகுதியில் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவேன்- திருமாவளவன் பேட்டி
    X

    சிதம்பரம் தொகுதியில் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவேன்- திருமாவளவன் பேட்டி

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #parliamentelection

    சிதம்பரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டம் வருகிற 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்வோம். மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்வேன். அவ்வாறு போட்டியிட்டால் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவேன்.

    கல்விக்காகவும், ஆன்மிகத்திற்காகவும், பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவின் பிறந்த நாளை தமிழக அரசு அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக பெண்ணாடத்தில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:-

    போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் மீது 17-பி என்கிற பிரிவில் நடத்தை விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

    இந்த அச்சுறுத்தல் பெரும்பான்மையான ஆசிரியர்களை பணிக்கு திரும்ப வைத்திருக்கிறது. தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதாக லட்சக்கணக்கானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை தமிழக அரசு பெற்று இருக்கிறது. அவர்களுக்கு தமிழக அரசு என்ன பதில் செல்ல போகிறது.

    தமிழக முதல்-அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப்போகிறார் என்ற விவரம் தெரியவில்லை. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாமல் அவர்களை அச்சுறுத்துவது கண்டனத்துக்குரியதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #parliamentelection

    Next Story
    ×