என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்
Byமாலை மலர்28 Jan 2019 6:19 AM GMT (Updated: 28 Jan 2019 6:19 AM GMT)
மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #MinisterSengottaiyan #JactoGeo
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கினார். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று தமிழக முதல்வரை சந்தித்து பேச உள்ளேன்.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற தொழில் அதிபர்கள் மாநாட்டின் மூலம் 3 லட்சத்து 41 ஆயிரம் கோடி அன்னிய முதலீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றபட்டுள்ளது.
தமிழக இளைஞர்கள் 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெரும் வகையில் தொழில் தொடங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசாக 2 கோடியே 17 லட்சம் குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கல்வி திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan #JactoGeo
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கினார். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று தமிழக முதல்வரை சந்தித்து பேச உள்ளேன்.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற தொழில் அதிபர்கள் மாநாட்டின் மூலம் 3 லட்சத்து 41 ஆயிரம் கோடி அன்னிய முதலீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றபட்டுள்ளது.
தமிழக இளைஞர்கள் 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெரும் வகையில் தொழில் தொடங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசாக 2 கோடியே 17 லட்சம் குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கல்வி திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan #JactoGeo
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X