என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை
சென்னை:
மதுரை மேலூரை சேர்ந்த மாணவர், ஷாருக்கான். இவர் மதுரையில் உள்ள மத்திய அரசு தொழில் நுட்ப கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த கல்லூரி தொடர்பான விழா கடந்த சில தினங்களாக சென்னையில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான் சென்னை வந்தார்.
சென்னை தி.நகர் நடேசன் பூங்காவின் பின்புறம் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். இங்கிருந்து தினமும் கல்லூரி விழாவுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை மாணவர் ஷாருக்கான், அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவர் ஷாருக்கான் தற்கொலை குறித்து மதுரையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னை வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்