search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே நடந்த ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கில் 7 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்
    X

    கோவை அருகே நடந்த ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கில் 7 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்

    கோவை அருகே நடந்த ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கில் 7 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

    கோவை:

    திருச்சூர் கல்யாண் நகைக் கடையில் இருந்து கடந்த 7-ந் தேதி கோவைக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை காரில் கொண்டு வந்தனர்.

    கோவை நவக்கரை அருகே கார் வந்த போது, ஒரு கும்பல் வழிமறித்து நகைகளை கொள்ளையடித்து விட்டு காருடன் தப்பிச் சென்றது. இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோஸ் என்பவர் தலைமையில் 12 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டதும், நகைகளுடன் பைரோஸ் திருப்பதிக்கு தப்பிச் சென்றதும் தெரிய வந்தது. போலீசார் விரைந்து சென்று பைரோசை மடக்கிப் பிடித்தனர்.

    ஆனால் நகைகளை அவர் தனது தாய் சமா, அண்ணன் அகமது சலீம் ஆகியோரிடம் கொடுத்ததும், அவர்கள் திருமலா பகுதியில் பதுங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர போலீசார் உதவியுடன் சமா, அகமது சலீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    போலீசாரிடம் சிக்கி உள்ள பைரோசிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையில் தொடர்புடையவர்கள் பற்றிய முழுவிவரங்களும் தெரிய வந்தது. அதன்பேரில் மேலும் 5 பேரை மடக்கிப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்டதில் மீதி நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதுதொடர்பாக விசாரிக்க சமா, அகமது சலீம் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். அதற்கு கோர்ட்டு அனுமதி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக திருப்பதியில் முகாமிட்டுள்ள தனிப்படையினர் இன்று அவர்கள் இருவரையும் காவலில் எடுப்பார்கள் என தெரிகிறது.

    ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக சென்னை கோர்ட்டில் சரண் அடைந்த வேலூரை சேர்ந்த தமிழ்ச் செல்வன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரை இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். அப்போது இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்கின்றனர்.

    தனிப்படை போலீசாரிடம் சிக்கிய 5 பேரை இன்று  கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். கும்பல் தலைவன் பைரோஸ் உள்பட மேலும் 5 பேர் பேர் ஓரிரு நாட்களுக்குள் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×