என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊராட்சி சபை கூட்டம்- திருப்போரூர் பகுதி மக்களை முக ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்
Byமாலை மலர்11 Jan 2019 6:38 AM GMT (Updated: 11 Jan 2019 6:38 AM GMT)
காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியம், இள்ளலூர் ஊராட்சி சபைக் கூட்டத்தில் முக ஸ்டாலின் இன்று மாலை கலந்து கொண்டு பொது மக்களைச் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அக்கிராம மக்களுடன் கலந்துரையாடுகிறார்.
சென்னை:
‘மக்களிடம் செல்வோம் மக்களிடம் சொல்வோம் மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கங்களை முன் வைத்து மக்களிடம் சென்று இன்றைய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் மோசமான செயல்பாடுகளை மக்களிடம் சொல்வதன் மூலமாக பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டங்களை தொடங்கி வைத்து பொது மக்களை சந்தித்து வருகிறார்.
அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,617 ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் ஊராட்சியில் கடந்த 9-ந்தேதி மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அன்று மாலை தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடினார்.
நேற்று காலை திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், சீகம்பட்டி ஊராட்சி சபைக் கூட்டத்திலும், மாலை மணிகண்டன் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி சபைக் கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.
இன்று 3-வது நாளாக மாலை 4 மணிக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியம், இள்ளலூர் ஊராட்சி சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களைச் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அக்கிராம மக்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதில் இள்ளலூர் ஊராட்சி கழக வார்டு செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். #DMK #MKStalin
‘மக்களிடம் செல்வோம் மக்களிடம் சொல்வோம் மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கங்களை முன் வைத்து மக்களிடம் சென்று இன்றைய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் மோசமான செயல்பாடுகளை மக்களிடம் சொல்வதன் மூலமாக பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டங்களை தொடங்கி வைத்து பொது மக்களை சந்தித்து வருகிறார்.
அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,617 ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் ஊராட்சியில் கடந்த 9-ந்தேதி மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அன்று மாலை தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடினார்.
நேற்று காலை திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், சீகம்பட்டி ஊராட்சி சபைக் கூட்டத்திலும், மாலை மணிகண்டன் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி சபைக் கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்.
இன்று 3-வது நாளாக மாலை 4 மணிக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியம், இள்ளலூர் ஊராட்சி சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களைச் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அக்கிராம மக்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதில் இள்ளலூர் ஊராட்சி கழக வார்டு செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். #DMK #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X