என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உயர்மின் கோபுரத்துக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் அடைப்பு
ஈரோடு:
ஈரோடு மூலக்கரை பிரிவில் இன்று விவசாயிகள் 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி 11 விவசாயிகள் தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள்.
இன்று (வியாழக்கிழமை) அவர்களின் உண்ணாவிரதம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.
காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ஈரோடு அடுத்த மேட்டுக் கடை பகுதியில் உள்ள வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காலை முதல் எந்த கடையும் திறக்கப்பட வில்லை. 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் மேட்டுக்கடை பகுதி இன்று வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையே உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காலை 10 மணி முதல் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்