என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஜா புயலுக்கு தப்பவில்லை- முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடும் சேதம்
Byமாலை மலர்20 Nov 2018 4:13 AM GMT (Updated: 20 Nov 2018 4:13 AM GMT)
கஜா புயலால் நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடும் சேதம் அடைந்துள்ளது. #GajaCyclone
நாகப்பட்டினம்:
தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரை கடந்தது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புயலால் மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள், டவர்கள் கீழே விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கஜா புயல் வந்து சென்ற பின்னரும் இன்னும் டெல்டா பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த வீடும் தப்பவில்லை. நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த வீடு நினைவு இல்லமாகவும், நூலகமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கஜா புயலால் இந்த வீட்டின் முன்பகுதியில் இருந்த மரம் விழுந்து ஓடுகள் உடைந்தன. முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையும் சேதம் அடைந்துள்ளன. இது தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone
தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் கடந்த 16-ந்தேதி அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரை கடந்தது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புயலால் மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள், டவர்கள் கீழே விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கஜா புயல் வந்து சென்ற பின்னரும் இன்னும் டெல்டா பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த வீடும் தப்பவில்லை. நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த வீடு நினைவு இல்லமாகவும், நூலகமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கஜா புயலால் இந்த வீட்டின் முன்பகுதியில் இருந்த மரம் விழுந்து ஓடுகள் உடைந்தன. முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையும் சேதம் அடைந்துள்ளன. இது தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X