search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
    X

    கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

    கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #BombThreat #TrainBombThreat

    போரூர்:

    சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு இன்று காலை 6.50 மணிக்கு ஒரு மர்ம போன் வந்தது.

    அதில் பேசியவர், சென்னையில் இருந்து செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு போன் தொடர்பை துண்டித்து விட்டார்.

    இதுகுறித்து வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு விசாரணை செய்தார். கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட போன் நம்பரை வைத்து அது யார் என்பதை கண்டுபிடித்தார்.

    வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான நவின் குமார் என்பவர் போனில் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நவின் குமார் கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் காட்பாடி. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த மூன்று மாதங்களாக தங்கி வேலை தேடி வந்தேன். தற்போது விடுமுறை நாள் என்பதால் சொந்த ஊர் செல்வதற்காக கோடம்பாக்கத்தில் இருந்து மின்சார ரெயில் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடி செல்ல முடிவு செய்தேன்.

    இன்று காலை கிளம்பினேன். ஆனால் நான் செல்வதற்கு சற்று நேரமாகி விட்டதால் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறினால் ரெயில் புறப்பட காலதாமதமாகும். எனவே கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #BombThreat #TrainBombThreat

    Next Story
    ×