என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
Byமாலை மலர்20 April 2018 8:58 AM GMT (Updated: 20 April 2018 8:58 AM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரியபாளையம்:
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை தச்சூர் கூட்டு ரோட்டில் வசித்து வருபவர் பிரபாத் சிங் குமார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் அதே பகுதியில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் 5 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். பக்கத்து வீடு என்பதால் பிரபாத்சிங் குமார் சிறுமியிடம் நெருங்கி பேசியதை யாரும் தவறாக நினைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை சிறுமி வீட்டின் முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த பிரபாத் சிங்குமார் ‘சாக்லேட்’ வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்தார். நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் சிறுமியும் அவருடன் சென்றாள்.
வீட்டின் பின்பகுதிக்கு அழைத்து சென்றதும் சிறுமிக்கு பிரபாத்சிங் குமார் பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் இதுபற்றி யாருடனும் சொல்லக்கூடாது என்று மிரட்டி சிறுமியை அனுப்பி விட்டார்.
வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு ரத்த போக்கும் உடல்நலக் குறைவும் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்த போது, பிரபாத்சிங் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது தெரிந்தது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் வீட்டில் இருந்த பிரபாத்சிங்கை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் அவரது தலையில் ரத்தம் கொட்டி மயங்கினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பிரபாத் சிங்கை மீட்டு கைது செய்தனர். பலத்த காயம் அடைந்த அவருக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சென்னையில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் கும்மிடிப்பூண்டி அருகே 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை தச்சூர் கூட்டு ரோட்டில் வசித்து வருபவர் பிரபாத் சிங் குமார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் அதே பகுதியில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் 5 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். பக்கத்து வீடு என்பதால் பிரபாத்சிங் குமார் சிறுமியிடம் நெருங்கி பேசியதை யாரும் தவறாக நினைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை சிறுமி வீட்டின் முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த பிரபாத் சிங்குமார் ‘சாக்லேட்’ வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்தார். நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் சிறுமியும் அவருடன் சென்றாள்.
வீட்டின் பின்பகுதிக்கு அழைத்து சென்றதும் சிறுமிக்கு பிரபாத்சிங் குமார் பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் இதுபற்றி யாருடனும் சொல்லக்கூடாது என்று மிரட்டி சிறுமியை அனுப்பி விட்டார்.
வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு ரத்த போக்கும் உடல்நலக் குறைவும் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்த போது, பிரபாத்சிங் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது தெரிந்தது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் வீட்டில் இருந்த பிரபாத்சிங்கை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் அவரது தலையில் ரத்தம் கொட்டி மயங்கினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பிரபாத் சிங்கை மீட்டு கைது செய்தனர். பலத்த காயம் அடைந்த அவருக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சென்னையில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் கும்மிடிப்பூண்டி அருகே 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X