search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில வாலிபர் கைது"

    • கேமராவில் வடமாநில வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது.
    • அம்மன் கழுத்தில் கிடந்த தங்கநகையை வடமாநில வாலிபர் திருடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் நல்லூர் செவந்தாம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். நேற்றிரவு பூஜைகள் முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை சென்று பார்த்த போது கோவிலின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கோவில் அலுவலக அறையில் பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 12 பவுன் தங்க நகை திருட்டு போய் இருந்தது.

    இது குறித்து உடனடியாக அவர் நல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கேரகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கேமராவில் வடமாநில வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது.அங்குள்ள ஜீவாநகர் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    எனவே கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வடமாநில வாலிபரின் உருவத்தை வைத்து அங்கு போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவிலில் திருடிய வாலிபர் போலீசில் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்றிரவு கோவிலை பூட்டி விட்டு சென்றதும் கோவிலுக்குள் புகுந்த அந்த நபர் அம்மன் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை மற்றும் அலுவலக அறையில் இருந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடியதுடன் அதனை வீட்டிற்கு எடுத்து சென்ற அவர், அதனை மூட்டை கட்டி வீட்டின் கழிப்பறையின் மேல் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் நகை மற்றும் பொருட்களை மீட்டனர். தொடர்ந்து அந்த நபர் வேறு ஏதாவது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அம்மன் கழுத்தில் கிடந்த தங்கநகையை வடமாநில வாலிபர் திருடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் அவினாசியை அடுத்து தேவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அவரிடமிருந்து 380 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அவினாசியை அடுத்து தேவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் (வயது 28) என்பதும் அவர் தற்போது பச்சாம்பாளையத்தில் தங்கி தேவம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 380 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். நகரில் ஏஜெண்டு ஒருவர் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார்.
    • கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் திருவண்ணாமலை நகர பகுதியில் தேனிமலை, மாரியம்மன் கோவில் தெருவில் 2 எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., மற்றும் போளூரில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். ஒன்றிலும், கலசப்பாக்கத்தில் ஒன்இந்தியா ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    கொள்ளை கும்பல் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர்.

    வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் அரியானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர். முதற்கட்டமாக தனிப்படை போலீசார் அரியானாவிற்கும், ஆந்திராவிற்கும் சென்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்.பில் அறை எடுத்து தங்கியிருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கே.ஜி.எப்.பிற்கு விரைந்து சென்றனர்.

    ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். நகரில் ஏஜெண்டு ஒருவர் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார். அவர்களுக்கு அறை எடுத்து கொடுத்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல் அடிப்படையில் அரியானா வாலிபர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் அவரது பெயர் ஆரிப் என தெரியவந்துள்ளது.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அங்கு தங்கியிருந்த கும்பல் போலீசார் நெருங்கியதை அறிந்து வட மாநிலத்திற்கு தப்பி சென்றனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்துள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஏ.டி.எம். கொள்ளையில் சந்தேகப்படும்படியான நபர்கள் மற்றும் உதவியவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளை கும்பல் பிடிபடுவார்கள் என்றனர்.

    • சாக்கு பையில் விற்பனைக்காக 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
    • இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே பங்களாப்புதூர் போலீசார் ரகசிய தகவல் பேரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

    போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியை சேர்ந்த குயராம் (22) என்பதும், அவர் கையில் வெள்ளை நிற பாலிதீன் சாக்கு பையில் விற்பனைக்காக 480 கிராம் எடையுள்ள ரூ.1,920 மதிப்புள்ள போதை தரக்கூடிய தடைசெய்யப்பட்ட 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.

    ×