search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "north state youth arrest"

    விருத்தாசலத்தில் இன்று காலை வீடு புகுந்து கணவன், மனைவியை வடமாநில வாலிபர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் மணி(வயது 50). இவரது மனைவி ராஜம்(45). மணி அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் விருத்தாசலம் ரெயில்வே ஜங்‌ஷன் அருகில் உள்ள ரெயில் நகரில் வீட்டுமனை வாங்கி அதில் வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். அந்த வீடு அப்பகுதியில் தனிவீடாக அமைந்துள்ளது.

    இதனால் கணவன்- மனைவி இருவரும் அவ்வப்போது அந்த வீட்டுக்கு வந்து மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு நெய்வேலிக்கு சென்று விடுவார்கள்.

    இந்நிலையில் இன்று காலை கணவன்-மனைவி இருவரும் விருத்தாசலம் ரெயில் நகரில் உள்ள வீட்டுக்கு வந்தனர். ராஜம் மாடுகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வட மாநில வாலிபர் ஒருவன் திடீரென வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ராஜத்தை சரமாரியாக தாக்கினான்.

    அப்போது அவரது கணவர் மணி ஓடி வந்து தடுக்க முயன்றார். அவரையும் சரமாரியாக தாக்கினான். இதனால் கணவன், மனைவி இருவரும் பயந்தபடி தங்கள் வீட்டுக்குள் ஓடி சென்று கதவை பூட்டிகொண்டனர். அப்போது அந்த மர்ம வாலிபர் வீட்டின் பின்புற கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தான்.

    கணவன்-மனைவி இருவரையும் களை கொத்தியால் கொடூரமாக தலையில் வெட்டினான். இதில் அவர்களது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.

    இதுகுறித்து தொலைபேசி மூலம் விருத்தாசலத்தில் உள்ள உறவினர்களுக்கு மணி தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் அவரது உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு நின்ற அந்த மர்ம வாலிபர் பிடித்து விசாரித்தனர். அவர்களையும் அந்த மர்ம நபர் சரமாரியாக தாக்கினான்.

    இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடியது. அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த வடமாநில மர்ம வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

     கொடூர தாக்குதலில் காயமடைந்த கணவன்-மனைவி இருவரும் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    தகவல் அறிந்து விருதாச்சலம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த வாலிபரை மீட்டு வேனில் ஏற்றினார்கள்.

    அப்போது அவன் போலீசாரையும் தாக்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கை, கால்களை கட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அந்த வாலிபரால் தாக்கப்பட்ட மணி, அவரது மனைவி ராஜம் ஆகியோர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் மேலும் அவருடன் 2 வாலிபர்கள் வந்தது தெரியவந்தது. தப்பி ஓடிய அந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    நந்தம்பாக்கம் அடுத்த மனப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    நந்தம்பாக்கத்தை அடுத்த மனப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், புனேவை சேர்ந்த சசிகாந்த் சிவாஜி (38) என்பவருக்கும் இணைய தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது.

    நாளுக்கு நாள் இந்த தொடர்பு தீவிரமானது. அந்த இளம் பெண்ணும் சசிகாந்த் சிவாஜியும் வியாபாரம் தொடர்பாக பேசிக்கொண்டனர். இந்த நிலையில் சசிகாந்த் சிவாஜியை சந்திக்க இந்த இளம்பெண் புனே சென்றார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் நெருங்கிப் பழகினார்கள். வாலிபர் சசிகாந்த் சிவாஜி தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அந்த பெண் இருந்தார்.

    இந்த நிலையில், அந்த பெண்ணை வற்புறுத்தி சசிகாந்த் சிவாஜி பலமுறை உறவு கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண் மனப்பாக்கத்துக்கு திரும்பினார்.

    சில தினங்களில் அங்கு வந்த சசிகாந்த் சிவாஜி அந்தபெண்ணின் வீட்டில் தங்கினார். இருவரும் கணவன்-மனைவி போல இருந்து வந்தனர்.

    இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வற்புறுத்தி வந்தார். இந்த நிலையில், சசிகாந்த் சிவாஜி திடீர் என்று அவருடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

    இதனால் பதட்டம் அடைந்த அந்த பெண் புனே சென்று வாலிபர் சசிகாந்த் சிவாஜியை சந்தித்தார். அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சென்னை திரும்பினார். நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், “சசிகாந்த் சிவாஜி திருமண ஆசை காட்டி தன்னை கற்பழித்து விட்டதாகவும், வியாபாரம் செய்வதாக கூறி ரூ.10 லட்சம் ரூபாயை தன்னிடம் இருந்து வாங்கி மோசடி செய்து விட்டதாகவும்“ கூறி இருந்தார்.

    இதையடுத்து, கடந்த 6-ந் தேதி போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் மோகன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்ட தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. அவர்கள் புனே சென்று மணப்பாக்கம் பெண்ணை ஏமாற்றி கற்பழித்த வடமாநில வாலிபர் சசிகாந்த் சிவாஜியை கைது செய்தனர்.

    சென்னை கொண்டு வரப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    அவரை கைது செய்து கொண்டு வந்த தனிப்படை போலீசாரை, துணை கமி‌ஷனர் முத்துசாமி ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.
    ×