என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி விரைவில் மலரும் - டி.டி.வி.தினகரன்
Byமாலை மலர்13 Feb 2018 4:12 AM GMT (Updated: 13 Feb 2018 4:12 AM GMT)
தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சியில் கூறினார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் காந்தி சிலை அருகே டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வின் மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் நகரசபை தலைவர் ஜவகர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது தினகரன், திறந்த வேனில் நின்றபடி பேசினார். அவர் பேசியதாவது:-
ஜெயலலிதாவின் கோட்டையாக பட்டுக்கோட்டை உள்ளது. தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருப்பது ஜெயலலிதாவின் ஆட்சியல்ல. இது மக்கள் விரோத ஆட்சி. இந்த ஆட்சியை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும்.
ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் பணியில் இங்கிருந்து எண்ணற்ற பேர் பணியாற்றினர். ஆதலால் தான் நான் வெற்றி பெற்றேன். ஆட்சி அதிகாரம் இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை பெற்று விட்டனர். உண்மையான இயக்க தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்.
நாங்கள் எங்கு சென்றாலும் பொதுமக்கள், ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என்கிறார்கள். தமிழகத்தில், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும். தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்வோம். மக்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.
வருகிற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுபவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பட்டுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் காந்தி சிலை அருகே டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வின் மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் நகரசபை தலைவர் ஜவகர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது தினகரன், திறந்த வேனில் நின்றபடி பேசினார். அவர் பேசியதாவது:-
ஜெயலலிதாவின் கோட்டையாக பட்டுக்கோட்டை உள்ளது. தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருப்பது ஜெயலலிதாவின் ஆட்சியல்ல. இது மக்கள் விரோத ஆட்சி. இந்த ஆட்சியை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும்.
ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் பணியில் இங்கிருந்து எண்ணற்ற பேர் பணியாற்றினர். ஆதலால் தான் நான் வெற்றி பெற்றேன். ஆட்சி அதிகாரம் இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை பெற்று விட்டனர். உண்மையான இயக்க தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்.
நாங்கள் எங்கு சென்றாலும் பொதுமக்கள், ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என்கிறார்கள். தமிழகத்தில், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும். தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்வோம். மக்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.
வருகிற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுபவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பட்டுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X