என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை செயலாளர் மாற்றம் குறித்து மத்திய அரசு கருத்து கேட்கவில்லை: நாராயணசாமி
Byமாலை மலர்4 Nov 2017 5:00 AM GMT (Updated: 4 Nov 2017 5:00 AM GMT)
தலைமை செயலாளர் மாற்றம் குறித்து மத்திய அரசு கருத்து கேட்கவில்லை என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை தலைமை செயலாளராக பணியாற்றி வரும் மனோஜ் பரிதா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக டெல்லியை சேர்ந்த அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
இதனால் கவர்னர் கிரண்பேடி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் செய்ததன் பேரிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தலைமை செயலாளர் மாற்றம் குறித்து தனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
பொதுவாக தலைமை செயலாளரை மாற்றும் போது மத்திய அரசு மாநில முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கும்.
ஆனால், தற்போது மத்திய அரசு எந்தவிதமான ஆலோசனையும் நடத்தாமல் தலைமை செயலாளரை மாற்றி உள்ளது. இதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் மாற்று கட்சி ஆட்சி நடைபெறுவதுதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை தலைமை செயலாளராக பணியாற்றி வரும் மனோஜ் பரிதா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக டெல்லியை சேர்ந்த அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
இதனால் கவர்னர் கிரண்பேடி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் செய்ததன் பேரிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தலைமை செயலாளர் மாற்றம் குறித்து தனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
பொதுவாக தலைமை செயலாளரை மாற்றும் போது மத்திய அரசு மாநில முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கும்.
ஆனால், தற்போது மத்திய அரசு எந்தவிதமான ஆலோசனையும் நடத்தாமல் தலைமை செயலாளரை மாற்றி உள்ளது. இதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் மாற்று கட்சி ஆட்சி நடைபெறுவதுதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X