என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி கோவிலில் குழந்தையை விட்டு சென்ற பெண்ணை தேடும் போலீசார்
Byமாலை மலர்27 Sep 2017 6:43 AM GMT (Updated: 27 Sep 2017 6:43 AM GMT)
பொள்ளாச்சி கோவிலில் குழந்தையை விட்டு சென்ற பெண்ணை கோவிலில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 22-ந் தேதி 2 மாத பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. குழந்தையை கோவில் நிர்வாகத்தினர், போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த குழந்தை கிணத்துக்கடவில் உள்ள சரணாலயம் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவிலில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு பெண், குழந்தையை கோவிலில் விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததை போலீசார் பார்த்தனர்.
அதில் பச்சை கலரில் சுடிதார் அணிந்த பெண் குழந்தையுடன் சாமி கும்பிட வருகிறார். கைக்குழந்தையுடன் வருவதை பார்த்ததும் கோவில் முன்பகுதியில் சாமி கும்பிடுவதற்காக வசதியாக அங்கிருந்த ஊழியர் கதவை திறந்து விடுகிறார். பின்னர் அந்த பெண் குழந்தையை அம்மன் பாதத்தில் வைத்து தரிசனம் செய்கிறார். அந்த பெண்ணுடன் தாடி வைத்த நபர் ஒருவரும் அருகில் வந்து நிற்கிறார்.
இதைதொடர்ந்து அந்த பெண் குழந்தையை அங்கு விட்டு விட போகிறோம். ஆகவே கடைசியாக பார்க்கும் சந்தர்ப்பம் என நினைத்து அந்த குழந்தைக்கு மாறி மாறி முத்தம் கொடுக்கிறார். பின்னர் குழந்தையை அனாதையாக விட்டு செல்கிறோமே என்று வேதனைப்பட்டு அந்த பெண் கண்ணீர் விட்டு அழுகிறார்.
பின்னர் கண்களை துடைத்து கொண்டு குழந்தையை கோவிலில் விட்டு செல்கிறார். இந்த காட்சிகளை வைத்து போலீசார் பல கோணங்களில் விசாரணையை முடுக்கி உள்ளனர். அந்த பெண்ணுடன் வந்த நபர் யார்? அந்த பெண்ணின் காதலனா? அல்லது கள்ளக்காதலனா? அந்த பெண் தான் குழந்தைக்கு உண்மையான தாயா? இருவரும் வெளியூரை சேர்ந்தவர்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 22-ந் தேதி 2 மாத பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. குழந்தையை கோவில் நிர்வாகத்தினர், போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த குழந்தை கிணத்துக்கடவில் உள்ள சரணாலயம் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவிலில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு பெண், குழந்தையை கோவிலில் விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததை போலீசார் பார்த்தனர்.
அதில் பச்சை கலரில் சுடிதார் அணிந்த பெண் குழந்தையுடன் சாமி கும்பிட வருகிறார். கைக்குழந்தையுடன் வருவதை பார்த்ததும் கோவில் முன்பகுதியில் சாமி கும்பிடுவதற்காக வசதியாக அங்கிருந்த ஊழியர் கதவை திறந்து விடுகிறார். பின்னர் அந்த பெண் குழந்தையை அம்மன் பாதத்தில் வைத்து தரிசனம் செய்கிறார். அந்த பெண்ணுடன் தாடி வைத்த நபர் ஒருவரும் அருகில் வந்து நிற்கிறார்.
இதைதொடர்ந்து அந்த பெண் குழந்தையை அங்கு விட்டு விட போகிறோம். ஆகவே கடைசியாக பார்க்கும் சந்தர்ப்பம் என நினைத்து அந்த குழந்தைக்கு மாறி மாறி முத்தம் கொடுக்கிறார். பின்னர் குழந்தையை அனாதையாக விட்டு செல்கிறோமே என்று வேதனைப்பட்டு அந்த பெண் கண்ணீர் விட்டு அழுகிறார்.
பின்னர் கண்களை துடைத்து கொண்டு குழந்தையை கோவிலில் விட்டு செல்கிறார். இந்த காட்சிகளை வைத்து போலீசார் பல கோணங்களில் விசாரணையை முடுக்கி உள்ளனர். அந்த பெண்ணுடன் வந்த நபர் யார்? அந்த பெண்ணின் காதலனா? அல்லது கள்ளக்காதலனா? அந்த பெண் தான் குழந்தைக்கு உண்மையான தாயா? இருவரும் வெளியூரை சேர்ந்தவர்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X