என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Byமாலை மலர்16 July 2017 5:07 AM GMT (Updated: 16 July 2017 5:07 AM GMT)
காவிரி ஆற்றில் இருந்து 3500 கன அடியாக வந்த நீர்வரத்து இன்று 2566 கன அடியாக குறைந்ததால், மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைந்தது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைணகளின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் கடந்த மாத இறுதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 8-ந் தேதி மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து நேற்று 3500 கன அடியாக அணைக்கு வந்தது.
அணைக்கு நேற்று வினாடிக்கு 3500 கன அடியாக வந்த நீர்வரத்து இன்று 2566 கன அடியாக குறைந்தது. நீர் திறப்பின் அளவை விட நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால் நேற்று 24.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 24.88 அடியாக உயர்ந்தது.
நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்ததால் குடிநீர் தேவைக்காக 500 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் திறப்பு நேற்று 1200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து அணையின் கீழ்மட்ட மதகுகள் வழியாகத் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று காலை முதல் அணையின் மின் நிலையத்தின் வழியாக திறந்து விடப்பட்டது.
மின்நிலையத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக 3 மணிநேரத்தில் மீண்டும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. மீண்டும் கீழ்மட்ட மதகுகள் வழியாக தண்ணீரை திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைணகளின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் கடந்த மாத இறுதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 8-ந் தேதி மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து நேற்று 3500 கன அடியாக அணைக்கு வந்தது.
அணைக்கு நேற்று வினாடிக்கு 3500 கன அடியாக வந்த நீர்வரத்து இன்று 2566 கன அடியாக குறைந்தது. நீர் திறப்பின் அளவை விட நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால் நேற்று 24.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 24.88 அடியாக உயர்ந்தது.
நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்ததால் குடிநீர் தேவைக்காக 500 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் திறப்பு நேற்று 1200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து அணையின் கீழ்மட்ட மதகுகள் வழியாகத் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று காலை முதல் அணையின் மின் நிலையத்தின் வழியாக திறந்து விடப்பட்டது.
மின்நிலையத்தில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக 3 மணிநேரத்தில் மீண்டும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. மீண்டும் கீழ்மட்ட மதகுகள் வழியாக தண்ணீரை திறந்து விடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X