என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்27 Jun 2017 5:42 PM GMT (Updated: 27 Jun 2017 5:42 PM GMT)
மதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்வதாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை:
மதுரை தல்லாகுளம் கலைநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பாரதி (வயது 29). இவருக்கும், நெல்லை வையாபுரி நகரைச் சேர்ந்த ராஜ்சந்தன் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 108 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பாத்திரங்கள், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவை சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது.
பாரதிக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
இந்நிலையில் பாரதி தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கணவர் ராஜ்சந்தன் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் ராஜா சீத்தாராமன்- காந்திமதி, அண்ணன் ராஜகோபால் ஆகியோர் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராஜ்சந்தன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை தல்லாகுளம் கலைநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பாரதி (வயது 29). இவருக்கும், நெல்லை வையாபுரி நகரைச் சேர்ந்த ராஜ்சந்தன் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 108 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பாத்திரங்கள், ரூ. 2 லட்சம் ரொக்கம் ஆகியவை சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது.
பாரதிக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
இந்நிலையில் பாரதி தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கணவர் ராஜ்சந்தன் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் ராஜா சீத்தாராமன்- காந்திமதி, அண்ணன் ராஜகோபால் ஆகியோர் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராஜ்சந்தன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X