என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை சட்டசபையில் 25-ந்தேதி பட்ஜெட் தாக்கல்
Byமாலை மலர்14 May 2017 10:40 AM GMT (Updated: 14 May 2017 10:40 AM GMT)
புதுவை அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 16-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் கிரண்பேடி உரையாற்றி கூட்ட தொடரை தொடங்கி வைக்கிறார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 16-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் கிரண்பேடி உரையாற்றி கூட்ட தொடரை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து 17-ந்தேதி சரக்கு மற்றும் சேவை வரி மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. 18 முதல் 21-ந்தேதி வரை 4 நாட்கள் சபை நிகழ்ச்சிகள் நடைபெறாது.
இதன்பின் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. 25-ந்தேதி நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் மாதம் இறுதி வரை நடைபெறும். இதில் துறை ரீதியான விவாதங்கள் நடக்கிறது. மொத்தம் 20 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி இன்று சட்டசபை கேபினட் அறையில் துறை செயலர்களின் ஆலோசனை கூட்டம் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதில் தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுவை அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 16-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் கிரண்பேடி உரையாற்றி கூட்ட தொடரை தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து 17-ந்தேதி சரக்கு மற்றும் சேவை வரி மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. 18 முதல் 21-ந்தேதி வரை 4 நாட்கள் சபை நிகழ்ச்சிகள் நடைபெறாது.
இதன்பின் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. 25-ந்தேதி நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் மாதம் இறுதி வரை நடைபெறும். இதில் துறை ரீதியான விவாதங்கள் நடக்கிறது. மொத்தம் 20 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி இன்று சட்டசபை கேபினட் அறையில் துறை செயலர்களின் ஆலோசனை கூட்டம் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதில் தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X