search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "budget filing"

    • கடந்தாண்டு தாக்கல் செய்த 2022-2023ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையில் ரூ.19.31 கோடி பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது
    • கடந்தாண்டு ஒதுக்கிய ரூ.10 கோடியை வருகிற நிதியாண்டில் 20 கோடி ரூபாயாக அதிகரிக்க வேண்டும்

    கோவை,

    கோவை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான வரவு-செலவு திருந்திய திட்ட அறிக்கை 2023-24 ம் ஆண்டுக்கான உத்தேச திட்ட அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் சென்னையை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் ஒரே நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உத்தரவிடப்பட்டது. அதன்படி கோவை உள்பட மற்ற மாநகராட்சிகளில் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு கோவை மாநகராட்சி அலுவலகமான விக்டோரியா அரங்கில் வரவு-செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

    கடந்தாண்டு தாக்கல் செய்த 2022-2023ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையில் ரூ.19.31 கோடி பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சொத்து வரிஉயர்த்தப்பட்டது. குப்பை வரி வசூலித்திருப்பதால், மாநகராட்சி வருவாய் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதனால் வருகிற 31-ந் தேதி தாக்கல் செய்யும் திருந்திய திட்ட அறிக்கையில் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது.

    வருகிற நிதியாண்டில் எதிர்பார்க்கும் வருவாயும், அதிகமாக இருக்குமென எதிர்பார்ப்பதால் மாநகராட்சி பொது நிதியில் வளர்ச்சி பணிகளுக்கு கூடுதலாக ஒதுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கவுன்சிலர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

    மண்டல அளவில் வார்டு பணிகளுக்கு கடந்தாண்டு ஒதுக்கிய ரூ.10 கோடியை வருகிற நிதியாண்டில் 20 கோடி ரூபாயாக அதிகரிக்க வேண்டும். குறுக்கு வீதிகள், சந்துகளில் ரோடுகளை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். மழைநீர் வடிகால் கட்ட வேண்டும்.

    சங்கனூர் பள்ளத்தை தூர் வார வேண்டும். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும். விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க வேண்டும். உள் விளையாட்டு அரங்கம் ஒதுக்க வேண்டும் என மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

    ×