என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் அதிரடி தொடருமா?- நியூசிலாந்துடன் நாளை மோதல்
Byமாலை மலர்25 Jan 2019 5:22 AM GMT (Updated: 25 Jan 2019 5:22 AM GMT)
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. #NZvIND
பேலூரில்:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் நேப்பியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி பேட்டிங்கில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, கேப்டன் விராட்கோலி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் உள்ளனர்.
பந்து வீச்சில் முகமது சமி, சாகல், குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் புவனேஸ்வர் குமார், ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோரும் உள்ளனர்.
பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹர்த்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் மீதான நடவடிக்கையை கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.
இதையடுத்து ஹர்த்திக் பாண்ட்யா நியூசிலாந்துக்கு புறப்பட்டு இந்திய அணியுடன் இணைகிறார். ஆனால் நாளைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
முதல் போட்டியில் வெற்றி பெற்றால்தால் இந்தியா நம்பிக்கையுடன் களம் இறங்கும். ஆனால் நியூசிலாந்து திடீரென எழுச்சி பெற கூடிய அணியாகும். இதனால் இந்தியா கவனமுடன் விளையாட வேண்டியது அவசியம்.
நாளைய போட்டியிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் வில்லியம்சஸ் தவிர மற்ற வீரர்கள் முதல் ஆட்டத்தில் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.
இதனை சரி செய்ய அந்த அணி வீரர்கள் முயற்சிப்பார்கள். நாளைய ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும். இதனால் வெற்றி பெற கடினமாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NZvIND
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் நேப்பியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி பேட்டிங்கில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, கேப்டன் விராட்கோலி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் உள்ளனர்.
பந்து வீச்சில் முகமது சமி, சாகல், குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் புவனேஸ்வர் குமார், ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோரும் உள்ளனர்.
பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹர்த்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் மீதான நடவடிக்கையை கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.
இதையடுத்து ஹர்த்திக் பாண்ட்யா நியூசிலாந்துக்கு புறப்பட்டு இந்திய அணியுடன் இணைகிறார். ஆனால் நாளைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
முதல் போட்டியில் வெற்றி பெற்றால்தால் இந்தியா நம்பிக்கையுடன் களம் இறங்கும். ஆனால் நியூசிலாந்து திடீரென எழுச்சி பெற கூடிய அணியாகும். இதனால் இந்தியா கவனமுடன் விளையாட வேண்டியது அவசியம்.
நாளைய போட்டியிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் வில்லியம்சஸ் தவிர மற்ற வீரர்கள் முதல் ஆட்டத்தில் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.
இதனை சரி செய்ய அந்த அணி வீரர்கள் முயற்சிப்பார்கள். நாளைய ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும். இதனால் வெற்றி பெற கடினமாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NZvIND
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X