search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணியால் நிச்சயமாக வெல்ல முடியாது - ரிக்கி பாண்டிங்
    X

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணியால் நிச்சயமாக வெல்ல முடியாது - ரிக்கி பாண்டிங்

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல இயலாது என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். #AUSvIND #RickyPonting
    பெர்த்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    4 டெஸ்ட் தொடரில் அடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் டெஸ்ட் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல இயலாது என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இந்த டெஸ்ட் தொடரில் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளையும் கவனித்து வருகிறேன். இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரை நிச்சயமாக வெல்ல முடியாது. ஏனென்றால் இந்தியாவின் பேட்டிங் வரிசை மோசமாகவே இருக்கிறது. பெர்த் டெஸ்டில் இது வெட்டவெளிச்சமாகி விட்டது.

    தொடக்க வீரர் காயம், புதிய வீரரை அடுத்த டெஸ்டில் களம் இறக்குதல் போன்ற சூழல் இந்திய வீரர்களின் மனநிலையை பாதிக்கும்.

    ஆஸ்திரேலிய அணி மெல்போர்னில் நடைபெறும் அடுத்த போட்டிக்கு பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். மிகவும் அமைதியாக ஆடினாலே இந்தியாவை எளிதில் வென்றுவிடலாம்.

    மெல்போர்ன், சிட்னி ஆடுகளங்கள் இந்திய வீரர்களுக்கு ஏற்றவையாக இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும். அந்த அணியின் வெற்றி நீடிக்கும்.

    இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார். #AUSvIND #RickyPonting
    Next Story
    ×