search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆறு பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கும் இந்தியா- ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு?
    X

    ஆறு பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கும் இந்தியா- ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு?

    அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி 12 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. #AUSvIND #RohitSharma
    அடிலெய்டு:

    இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அடிலெய்டில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி ஆடும் லெவனையே அறிவித்துவிட்டது.  இந்திய அணியில், ரோகித் சர்மாவா, ஹனுமா விஹாரியா யார் ஆடப்போகிறார்கள் என்பது நாளை தெரியும்.

    “உள்நாட்டில் எந்த ஒரு ஆஸ்திரேலிய அணியையும் பலவீனம் என்று கூறமுடியாது.  எந்த ஒரு அணியைப் பற்றியும் முன் கூட்டிய அபிப்ராயத்தை உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. என்ன நடந்தாலும் திறமை இருக்கிறது. நாம் என்ன பேசினாலும் செய்தாலும் கடைசியில் திறமைதான் முக்கியம்” என்று கூறிய இந்திய கேப்டன் விராட் கோலி 12 வீரர்கள் பெயரை வெளியிட்டார்.

    இரு அணிகளும் வெளியிட்ட வீரர்கள் விவரம் வருமாறு

    இந்தியா:- (கேப்டன்) விராட் கோலி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா,  ரஹானே, விகாரி, ரோகித் சர்மா, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சமி, இசாந்த் சர்மா, பும்ரா.

    ஆஸ்திரேலியா:- ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவ்ஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கம்ப், ட்ராவிஸ் ஹெட், டிம் பெய்ன், மிட்செல் ஸ்டார்க், பாட் கமின்ஸ், நேதன் லயன், ஜோஷ் ஹேசல்வுட். 
    Next Story
    ×